Thursday 8 August 2013

செல்லமாய் சிணுங்கிட
கோவமாய் சீறிட
உடைந்து அழும்போது
இறுக்கி அணைத்து தோள் சாய்த்திட

வலியில் ஆறுதலாய் கைபிடிக்க
வழியில் கையோடு கை கோர்க்க
விழியின் நீர் துடைக்க
வீழும் போது எல்லாம் கை கொடுக்க

விடிய விடிய வெட்டியாய் பேசிட
மார்பில் முகம் புதைத்து
பயம் ஏதும இல்லா குழந்தையாய்
மனம் குளிர்ந்து உறங்கிட

எல்லையில்லா குதூகலம் பகிர
ஏகாந்தத்தின் ஆனந்தம் பகிர்ந்திட
என வாழ்வின் எல்லாம் பகிர்ந்திட
வாழ் நாள் முழுதும் நீ வேண்டும்......

No comments:

Post a Comment