Thursday 12 December 2013

பெண்

பெண்ணை மலர் என்று சொன்னோம் தீயிலிட்டு பொசுக்கினோம் ..
பெண்ணை கிளி என்று சொன்னோம் சிறகு முறித்து கூண்டில் அடைத்தோம்..

பெண்ணை மான் என்று சொன்னோம் வேட்டையாடி கொன்றோம்
பெண்ணை தெய்வம் என்று சொன்னோம் தெருவில் போட்டு அடித்தோம் ..

பெண்ணை அழகு என்று சொன்னோம் அமிலம் ஊற்றி ரசித்தோம்
பெண்ணைத் தாய் என்று சொன்னோம். ஜடமாக்கினோம். ... 

பெண்ணை மனைவி என்று சொன்னோம் அடிமை ஆக்கினோம்.
பெண்ணை சகோதரி என்று சொன்னோம் விலை பேசினோம்..
அதனால் இனி பெண்ணை பெண் என்றே சொல்வோம்

No comments:

Post a Comment