Friday 21 November 2014

பாதை



வெற்று பாறையாய் இருந்த பொழுதுகளில்
அசைவற்று கிடப்பதே சாஸ்வதம் என்று எண்ணி இருந்தேன்..
போகிற போக்கில் யார் யாரோ சிறிது சிறிதாக நகர்த்த
சிற்ப கூடம் வரை வந்துவிட்டேன்.

சிற்ப கூடத்தின் அழகிய சிலைகள் பார்த்து மயங்கி சிலையாக மாறிட எத்தனிக்க
தன்னை தான் செதுக்கி கொள்ளும் அறிவும் ஆற்றலும் இல்லாமல்
சிற்ப கூடத்தை விட்டு போக மனமுமில்லாமல்
சிற்பிகளின் பார்வை பட உளிகளுக்கு பக்கத்தில்..

சிலையாவேனோ இல்லை பாறையாகவே தங்கிடுவேனோ
பாறையாக தனித்திருந்த பொது இல்லாத ஏக்கம்
அழகிய சிலையாக மாறிய பாறைகளை
பார்த்து வருகிறது கூடவே இயலாமையும்...

No comments:

Post a Comment