Wednesday 9 October 2013

வார்த்தை கத்திகளை
உன்னை விட நன்றாகவே
குருதி கசிய, கசிவது வெளியே தெரியாமல்
சொருக தெரியும்..

வலியின் வீரியம்
தாங்கியவள் அதனால்
மெளனமாக விலகி செல்கிறேன்..


*********************

அர்த்தமில்லாத விசாரிப்புகள் தான் 
அர்த்தமில்லா பேச்சுகள் தான் 
அர்த்தமில்லா சண்டைகள் தான் 
அர்த்தமில்லா கோபங்கள் தான் 
அர்த்தமில்லா மௌனங்கள் தான் 
ஆனால் இவை யாவும் 
உன்னிடம் அர்த்தமுள்ளதாகிறது...



********

No comments:

Post a Comment