Friday 25 April 2014

விசித்திரம்

அழகான குடும்பம் 
அன்பான குழந்தைகள்
பொறுப்பான கணவர்
மரியாதைக்குரிய உறவுகள்
அக்கறை காட்டும் நண்பர்கள்
இத்தனை இருந்தும் சமயங்களில் 
பெருநகர வீதியில் தனித்து விடப்பட்ட 
அனாதைக் குழந்தை போல அழுது தீர்க்கிறது மனசு....

மனித மனம்

குற்றுயிராய் விழ நேர்ந்தால்
ஓடி வந்து தாங்கிடுவேன்

அன்பை களிம்பாக்கி
ரணம் எல்லாம் ஆறிட
செய்திடுவேன்

அணைத்து ஆறுதல்படுத்தி
என்னுயிர் தந்துனை
உயிர்பிப்பேன்

காயப்படுத்தியது
நானாக இல்லையென்றால்