Monday, 17 February 2014

காதல் எனபது என்ன

காதல் என்றால் என்ன என்று
எல்லாரிடமும் கேட்டேன்

பார்த்து கொண்டே இருப்பது
என்றனர் ஒரு சாரர்

பேசி கொண்டே இருப்பது
என்றனர் ஒரு சாரர்

அவன் இல்லாத வாழ்க்கை 
வெறுமை என்றனர் ஒரு சாரர்

அவனு க்காக என்னையே தருவேன்
என்றனர் ஒரு சாரர்

உணர்ச்சிவசப்பட்ட இன்னும் சிலரோ
அவனின்றி நான் இல்லை என்றனர்

நானும் காதல் கடவுள் போல
விளங்க முடியா விஷயம் என்று
கடந்து விட எத்தனிக்க

அவன் மௌனமாக புன்னகைத்து
இழுத்து அணைத்து முத்தமிட்டு

உன்னை என்னிலிருந்தும் என்னை உன்னிலிருந்தும்
பிரித்து பார்க்கவே முடியாத
அறிவு கொண்டு அளக்க முடியா
உணர்வு தான் காதல் என்றான்

ஏமாற்றம்

ஏமாற்றங்களை ஜீரணிக்க பழக்கும்
சுயமரியாதை சுரண்டப்படுவதை வேடிக்கை பார்க்கும்
ஆசைகளை வெறுக்க கற்று கொடுக்கும்
தனிமையை விரட்டுவது போல போக்குக்காட்டி 
பெருந்தனிமையில் தள்ளும் 

அழுகையில் உணர்வுகளை கரைக்க முடியாது
என்பது புரிந்தாலும் 
வெளியேற வழி தெரியாமல் 
விழி பிதுங்கும்
வாழும் போதே சாகும் துணிச்சலை
கொடுக்கும்..

உணவே மருந்து மருந்தே உணவு
என்று நோய்களுக்கு சொல்வதுண்டு
அது போல
காதலே நோய்
காதலே மருந்தாகும்
விந்தையும் காதலில் தான் சாத்தியம்..