Monday 17 February 2014

ஏமாற்றம்

ஏமாற்றங்களை ஜீரணிக்க பழக்கும்
சுயமரியாதை சுரண்டப்படுவதை வேடிக்கை பார்க்கும்
ஆசைகளை வெறுக்க கற்று கொடுக்கும்
தனிமையை விரட்டுவது போல போக்குக்காட்டி 
பெருந்தனிமையில் தள்ளும் 

அழுகையில் உணர்வுகளை கரைக்க முடியாது
என்பது புரிந்தாலும் 
வெளியேற வழி தெரியாமல் 
விழி பிதுங்கும்
வாழும் போதே சாகும் துணிச்சலை
கொடுக்கும்..

உணவே மருந்து மருந்தே உணவு
என்று நோய்களுக்கு சொல்வதுண்டு
அது போல
காதலே நோய்
காதலே மருந்தாகும்
விந்தையும் காதலில் தான் சாத்தியம்..

No comments:

Post a Comment