Thursday 30 January 2014

தலைவலியும் நானும்


கிட்டதட்ட இருபது வருடங்களாக தலைவலியுடன் போராடி கொண்டு இருக்கிறேன். அதுவும் ஒரு பத்து வருடங்களுக்கு முன் வலியின் உச்ச்கட்டம வரை சென்று தாங்க முடியாமல் அவஸ்தைப்பட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் எல்லாம் வலி எப்போது வரும் என்றே தெரியாது திடீரென்று ஆரம்பித்து என்னை குதறி போட்டுவிடும் தொடர் வாந்தி, வாந்தி எடுக்கும்போது மண்டையே வெடித்து விடுவது போல வலிக்கும்..

எல்லா ஸ்கேன்கள், மருத்துவ பரிசோதனைகள் முடிவில் இது மைக்ரேன் இதற்கு நிரந்தர தீர்வு இல்லை..ஆனால ஓரளவு வீரியம் குறைக்கலாம் பழக்க வழக்கங்கள் மூலம் தவிர்க்கலாம் என்று கூறினார்கள்..சித்தா, ஆயுர்வேதிக் என்று எல்லா பக்கமும் சென்று கடைசியில் இப்போது வலியின் காரணிகள் தெரிந்து ஓரளவு முன்ஜாக்கிரதையாக இருக்கிறேன் ஆனாலும் சில சமயம் ஆசை அடக்க முடியாமல் எதையாவது தின்று விட்டு அவஸ்த்தைப்பட்டதும் உண்டு..  

மைக்ரேன் என சொல்லப்படும் தலைவலிகளுக்கான காரணங்களாக டாக்டர்கள் கூறுவதும் அதில் நான் அவஸ்தைபடுவதும். தலைவலியை தவிர்க்கவும், வந்த பின் நான் செய்வதையும் பகிர்கிறேன்..

-          ஒவ்வாமை..இது உணவு, வாசனை, சத்தம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எனக்கு கொக்கோ, சோயா சாப்பிட்டால் கண்டிப்பாக தலைவலியும் வாந்தியும் உண்டு (அப்படியும் நாக்கு ருசிக்காக ப்ளாக் பாரஸ்ட் pure கொக்கோ கேக் சாப்பிட்டு அவஸ்தை பட்டிருக்கிறேன்)

-          கண்டிப்பாக வெயிலில் வெளியில் செல்லமாட்டேன்..அதிக சத்தம் உள்ள இடங்களை தவிர்த்து விடுவேன். ஆர்கெஸ்ட்ரா, கோவில் திருவிழாவில் போடும் ஸ்பீக்கர் சத்தம் கொடுக்கும் வலி சொல்லி மாளாது..இதனாலேயே சினிமா தியேட்டர் பக்கம் செல்வதில்லை.

-          அதிக வாசனையுடைய எதுவுமே பிரட்டலை, தலைவலியை உண்டாகும்.. அதுவும் குறிப்பாக சில பர்பியூம்கள் கொடுக்கும் தலைவலி ரொம்ப அதிகம்..

-          அதிகம் தூங்கவும் கூடாது, அதிகம் விழித்திருக்கவும் கூடாது.. சரியான நேரத்தில் சாப்பாடு, சரியான நேரத்தில் தூக்கம் இவை இரண்டும் இல்லை என்றால் தொலைந்தேன்..
-          டென்ஷனால் வரும் தலைவலி, மாதாந்திர சுழற்சியில் ஹார்மோர்ன் மாறுபாடால் வரும் தலைவலி என்று என்ன தான் நாம் முன்னேச்செரிக்கையாக இருந்தாலும் வந்து சில சமயம் கபடி ஆடிவிட்டு தான் போகும்..

-          தலைவலி வந்தபின் சத்தம், வெளிச்சம் எதுவும் இல்லாத அறையில் ஏசியை மிதமாக வைத்துவிட்டு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரை போட்டு தூங்கி எழுந்தால் ஓரளவு பலன் கிடைக்கிறது..


-          முன்பு அளவுக்கு இப்போது அவ்வளவு தீவிரமாக எனக்கு தலைவலி வருவதில்லை.. வலியின் வீரியம் குறைந்துவிட்டதா இல்லை நான் வலிக்கு பழகிவிட்டேனா என்று தெரியவில்லை.. அல்லது ஓரளவு எனக்கு ஸ்ட்ரெஸ் தற்போது நிறைய குறைந்திருக்கிறது.. அது காரணமா தெரியவில்லை.. 

No comments:

Post a Comment