Monday 30 June 2014

பெண்மை

மழலையில் கரைந்து போகும் குழந்தை உள்ளம் உண்டு
வலிகளை மறந்து சிரிக்கும் வழியும் தெரியும்
காதலில் குழைந்திடும் இதயம் உண்டு
காமத்தில் உடல் அனிச்சையாய் இயங்க
வேடிக்கை பார்க்கும் வெற்று மனமும் உண்டு

பொறாமையில் புழுங்கி வெந்திடும் நெஞ்சம் உண்டு
சிறுமை கண்டு பொங்கிடும் ஆற்றல் உண்டு
அகங்காரத்தில் ஆர்பரிக்கும் கர்வமும் உண்டு
துரோகத்தில் கொதித்து துரோகியை
துவம்சம் செய்திடும் வீரமும் உண்டு

உடைந்து போன உள்ளத்தை ஆறுதல்படுத்தும்
கருணை உண்டு.
கோவத்தில் எரிமலையாய் குமுறிடும்
குணமும் உண்டு
கோபப்பட்ட வேகத்த்தில் குளிர்ந்து போகும்
நேசமும் உண்டு.
அறிவை சிலாகிக்கும் விவேகமும் உண்டு

எல்லாம் இருந்தும் அன்பின் முன
நிராயுதபாணியாக நிற்கும் பெண்மையை
என்ன செய்யவென தெரியவில்லை...

No comments:

Post a Comment