Thursday 25 June 2015

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம் - பிரபஞ்சன் - இலக்கிய ஆய்வு கட்டுரை தொகுப்பு

பிரபஞ்சனின் எழுதிய “ ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் “ சிறுகதை தொகுப்பு ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அவரின் எழுத்து பிடித்து போக சென்ற வாரம் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கிய போது “துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்” புத்தகம் எடுத்தேன். கதை பிடிக்குமளவு எனக்கு கட்டுரைகளும் பிடிக்கும். இந்த புத்தகம் இலக்கிய ஆய்வுக்கட்டுரை அதுவும் சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்த தொகுப்பு என்றவுடன் தெரிந்து கொள்வோம் என்று வாங்கினேன்..

சங்க காலங்களில் பெண்களின் நிலை கொஞ்சம் மேம்பட்டிருக்கும என்று நினைத்து இருந்தேன். ஆனால் படித்த போது சங்க காலத்தில் தான் பெண்கள் அடிமைப்படுத்தும் முறையே தொடங்கி இருக்கிறது என்பது புரிந்தது.
அகநானூறு புறநானுறு தொல்காப்பியம் ஆரம்பித்து பழம் பெரும் காப்பியங்கலான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி வரை இருந்த காப்பிய பெண்கள் பற்றியும், காப்பியங்களின் ஊடாக பெண்களின் நிலை குறித்தும் கட்டுரை பேசுகிறது.

தமிழர் வாழ்வில் வைதீக சடங்குகள் புகுந்ததும் அதன் பின் உண்டான சாதீய பாகுபாடுகள் எப்படி தோற்றுவிக்கப்பட்டது எப்படி பிரித்து உயர்ந்தோர் தாழ்ந்தோர் பிரிவினை பாணர்கள் என்பவர்கள் யார் படித்த புலவர்கள் என்பவர்கள் வந்து அவர்கள் எப்படி மறைந்து போனார்கள் அல்லது திரிந்து போனார்கள, உழைப்பு சுரண்டல் என்பது சங்க காலம் தொட்டே எப்படி இருந்திருக்கிறது என்று பலவற்றையும் அலசி இருக்கிறார்.

பெண்கள் மீதான அடக்குமுறையும் பெண்களின் இலக்கணம் குறித்தும் கற்பு களவு என்று பெண்கள் கைக்கொள்ள வேண்டிய மாண்பு என்று மாய்ந்து மாய்ந்து அடிமைத்தனத்தை திணித்திருக்கிறது. பரத்தையர் பற்றி அவர்கள் எப்படி உருவாகி இருக்ககூடும் அவர்கள் வாழ்க்கை முறை சங்க காலம் தொட்டு மாதவி மணிமேகலை காலம் வரை சொல்லி இருக்கிறார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை குண்டலகேசி என்ற காப்பிய பெண்மணிகளில் குண்டலகேசி மட்டுமே சுயமான பெண்ணாக துணிவான பெண்ணாக காட்டப்பட்டிருப்பதை சுட்டி காட்டுகிறார். அறச்செல்வியாக நாயகியாக காட்டப்படும் மணிமேகலை சுயமாக தன வாழ்வை வாழாமல் தன மீது திணிக்கப்பட்ட பரிதாப வாழ்வை வாழ்ந்ததை சொல்லி இருக்கிறார்.

இக்கட்டுரை தொகுப்பை முழுதும் வாசிக்க சங்க காலம் தொட்டு இருந்த பெண்களின் நிலையை பற்றி நிறைய விஷயங்கள் தெரிநது கொள்ள முடிகிறது.

No comments:

Post a Comment