Wednesday 29 July 2015

பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு அவர்கள் எழுதிய நாவல் பற்றிய ஒரு பார்வை

“பசித்த மானுடம்” கரிச்சான் குஞ்சு அவர்கள் எழுதிய நாவல், கிளாசிக் வரிசைகளில் வருகிறது. காலச்சுவடு பதிப்பக வெளியீடு.
எதை பற்றியும் யோசிக்காமல் வாழ்க்கை இழுத்த இழுப்புக்கு செல்லும் கணேசன், வாழ்கையை தன் இஷ்டத்துக்கு வளைக்கும் கிட்டா இருவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் அவர்கள் எங்கு இட்டு செல்கிறது என்பது தான் கதைகளம்.

விரசத்த்துகும் கெட்ட வார்த்தைகள் உபயோகிக்கவும் அதிக வெளி இருக்கும் களம். ஆனால் ஆசிரியர் படிப்பவர் எந்த இடத்திலும் முகம் சுழிக்காத அளவு கனகச்சிதமாக கதையை நகர்த்தி இருக்கிறார். வார்த்தை பிரயோகங்கள் அவ்வளவு நேர்த்தி. கெட்ட வார்த்தையோ புனர்ச்சிகளின் விவரணையோ அப்படியே கொச்சையாக சொல்வது இலக்கியம் என்று நம்புபவர்கள் இத்தகைய நாவலை வாசித்து பின் தான் சொல்கிறார்களா என்று சந்தேகம் தவிர்க்க முடியவில்லை நாவலை வாசித்து முடித்த போது. ஓரினச்சேர்க்கையாளர்கள் சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு கொஞ்சம் புதிது.

கணேசன், கிட்டா என்ற இருவரின் பிள்ளை பிராயத்தில் இருந்து தொடங்குகிறது கதை. கும்பகோணத்தில் பிறந்து அனாதையான கணேசன் அங்கிருந்த ஒரு மடத்தில் சங்கரி மாமியிடம் அடைக்கலாமாகி அவர்களுக்கு வேலைகள் செய்து கொடுத்து அந்த சத்திரத்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடு போட்டு எச்சில் எடுத்து வாழ்க்கையை தொடங்குகிறான். சத்திரத்துக்கு வரும் குழந்தை இல்லா வாத்தியார் அவனை கூட்டி கொண்டு தோப்பூர் என்ற கிராமத்துக்கு செல்கிறார். அவனுக்கு பாடம் சொல்லி கொடுத்து பார்த்து கொள்வதாக. கணேசனும் செல்கிறான். அவரிடம் இருக்கும் வரை நன்றாக இருக்கும் அவன் பின் படிப்புக்காக கிராமம் விட்டு வெளியேறி நகரத்தில் வாழ்க்கை தொடங்கும் போது ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரின் ஆசை வார்த்தையால் தடம் புரள்கிறது.

வயிற்று பசியில் ஆரம்பிக்கும் கணேசனின் வாழ்க்கை காமப்பசி உள்ளவர்களுக்கு இரையாகி அவனும் அதில் சிக்குண்டு வாழ்க்கை இழுத்த இழுப்புக்கு செல்கிறான். சின்ன குழந்தையைக் இருக்கும் போது வாத்தியாரால் தத்து எடுக்கப்பட்டு கிராமத்துக்கு செல்லும் அவனை ஊரே கண்ணாக நினைத்து கொண்டாடுவதும் கடைசியில் தொழுநோயாளியாகி ஒருவருமே அவனை சீண்டாமல் போக கும்பகோணம் முத்து பிள்ளை மண்டபத்தில் தொழு நோய் சிகிச்சை பெற்று ஓரளவு விகாரம் குறைந்தும் அவனின் காமம் அலைகழிக்க அங்கிருந்து ஓடி தொழுநோய் பிச்சைக்காரனாகி ஒரு குருட்டு பிச்சைக்காரியுடன் வாழ்வை பிணைத்து கொள்கிறான்.

தொழுநோயாளி ஆகும் வரை அவனின் வாழ்க்கையில் எந்த சிந்தனையும் இல்லை. அவனை யார் யாரோ பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆண் பெண் இருபாலருமே. எல்லாரின் காம விகாரங்களுக்கும் தன்னை தாரை வார்த்துவிட்டு இவன் சந்தோசப்படுத்திய ஒரு பெண் மருத்துவர் இவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து இவனை ரயில்வே ஸ்டேசனில் இனி இந்த பக்கம் வரக்கூடாது என்று நிர்கதியாக விட்டுவிடுகிறார். .

அதன் பின் தான வாழ்க்கையை திரும்பி பார்க்கிறான். கிட்டத்தட்ட அவனுடைய நாற்பதுகளில் அதன் பின் அவனுள் ஏற்படும் மாற்றங்கள் தத்துவ விசாரங்கள் என்று கணேசன் தொட்டிருக்கும் இடத்தை ஆசரியர் மனித வாழ்க்கையின் தத்துவ விசாரங்களை எல்லாம் சொல்கிறார். கடைசியால் ஊரே ஞானியாக பார்க்கும் கணேசனின் உண்மை மனநிலை அவனின் சிந்தனையில் மனதில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் நம்மையயும் அகத்தேடலையும் வாழ்வையும் பற்றி சிந்திக்க வைக்கிறது.


கிட்டா ஊரால் ஊதாரி, திண்ணை தூங்கி, கிடாமாடு என்று கிட்டத்தட்ட அத்தனை பேராலும் புறக்கணிக்கப்பட வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் அந்த கிராமத்தை விட்டு கிளம்புகிறான் கணேசனும் சரி கிட்டாவும் சரி கிராமத்தை விட்டு வெளியேறிய பின் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் அவர்களை எங்கு எல்லாம் இட்டு செல்கிறார்கள் வாழ்க்கை அவர்களை எப்படி புரட்டி போடுகிறது. எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் கணேசன் வாழ்வு ஒரு மாதிரியாகவும் வாழ்வில் பணம் சம்பாரிக்க வேண்டும் தன்னை உதாசீனப்படுத்திய கிராமத்துக்கு வாழ்வில் ஜெயித்து பணக்காரனாக வரவேண்டும் என்ற ஆசையுடன் புறப்படும் கிட்டா மன்னார்குடி சென்று கார் ஓட்ட பழகி அதன் பின் படிப்படியாக எங்கெல்லாம் செல்கிறான்.

இதற்கிடையில் அவன் வாழ்வில் வரும் பெண்களை அவன் தேவைக்கு எப்படி உபயோகித்து கொள்கிறான். வசதி வந்தவுடன் தன்னை புறக்கணித்த தான் தூக்கி வளர்த்த அம்முவை வயது வித்தியாசம் அதிகமிருந்தும் திருமணம் செய்து கொள்வதும், அண்ணி, அம்முவின் அக்கா மாஞ்சி, அவனுக்கு தொழில் கற்று கொடுக்கும் சீமாவின் மனைவி பூமா என்று பெண்களுடன் உறவும் பணம், கார் சமூகத்தில் அந்தஸ்து என்று கிட்டா வாழ்க்கையும் நகர்கிறது.
கிட்டாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஒரு கட்டத்தில் கிட்டா தன் அந்தஸ்து எல்லாம் மனைவியாலும் மற்றவர்களாலும் தன் பிள்ளையாலும் தகர்க்கப்பட கண் முன் அவன் அதிகாரம் அந்தஸ்து எல்லாம் பொடிபொடியாக உதிர்வதை அதிர்ச்சியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பதும் பின் அவற்றை பெற அவன் எடுக்கும் தீர்மானங்களும் அது எதுவும் முடியாமல் கண் முன் அவன் எழுப்பிய அத்தனையும் அவனை கை கொட்டி சிரிப்பதை பார்த்து மன நிம்மதி இழந்து தவிக்கிறான்.

இவனும் கணேசனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். எல்லா பற்றிலிருந்தும் தன்னை விடுவித்து கொண்டு பிச்சைக்காரனாக கணேசன் அடைந்திருக்கும் சந்தோசமும் மலர்ச்சியும் எல்லாம் இருந்து நிம்மதி இன்றி தவிக்கும் கிட்டாவும் பேசும் வார்த்தைகள் எல்லாரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று..

“ தனியா உக்காந்து யோசிச்சு பாரு. முன்னெல்லாம் எல்லாரையும் எல்லாத்தையும் உனக்கு பிடிச்சுதுன்னு வச்சுண்டு இருந்தே இல்ல அதுக்கு காரணம் அவாளையும் அதுகளையும் நீ உன்னுடைய சொந்த பிரியத்துக்காகத்தான் அவ்வளவு பிரியமா வச்சுண்டு இருந்தே. அதே மாதிரி தான் அவாளும் அதுகளும் உனக்காக இல்லவே இல்லை, தங்களுக்காகத் தங்கள் பிரியத்துக்காக உங்கிட்டே பிரியமா இருந்ததுகள். இந்த உலகத்துல யாருக்குமே, தங்களைவிட வேறு எதுவுமே பிரியமாக இருக்க முடியாது. “
நாம் எதையெதையோ சாப்பிடுகிறோம், நம்மையும் எது எதெல்லாமோ முழுங்கி ஏப்பம் விடுறதுகள். தானும் எதுவும் சாப்பிடாமை, தன்னை எதுவுமே சாப்பிடவிடாமை... இந்த உலகம் அத்தனையிலும் பரவி ஊடுருவி இருக்கிறதுதான் நாமாம

No comments:

Post a Comment