Saturday 13 August 2016

Finger nails - Zoran Zivkovic


சமீபத்தில்  Finger nails – Zoran Zivkovic - serbian மொழியில் எழுதிய கதை. (ஆங்கிலத்தில் Alice Copple ) ஒன்றை வாசித்தேன். மிகவும் வித்தியாசமான கதை. ப்ராஸ்கோ என்கிற சிறுவன் தனது எட்டு வயதில் முதன் முறையாக நகங்களை வெட்டுகிறான் . அதுவரை அம்மா நகங்களை வெட்டி வர முதன் முறையாக அவன் வெட்டும்போது காயம்படாமல் அழகாக வெட்டியது அவனுக்கு மிக பெருமையாக இருக்க, வெட்டிய நகங்கள் அழகிய பிறை போல தெரிவதில் குதூகலமடைகிறான். அதை சேகரித்தால் என்ன என்று தொடங்க ஒரு கவரில் போட்டு அன்றைய தேதியை போட்டு ரகசியமாக பத்திரப்படுத்தி வைக்கிறான்


அம்மாவுக்கு தெரிந்தால் சேகரிக்க சம்மதிக்க மாட்டார்கள் என்ற பயத்தில் அதை அம்மாவுக்கு தெரியாமல் பத்திரப்படுத்துகிறான். பின்னர் இரண்டு வாரங்களுக்கு பிறகு நகம் வெட்ட சிறிது யோசித்து அதையும் அன்றைய தேதியிட்டு ஒரு கவரில் போட்டு சேகரிக்கிறான். வெட்டிய நகங்களை வீசி எறிய மனம் வராமல் அப்படி செய்தால் தன் உடலில் இருந்து ஒரு பாகத்தையே இழப்பது போல தோன்ற தொடர்ந்து நகங்களை பத்திரப்படுத்தி சேகரிக்க ஆரம்பிக்கிறான்.
வருடத்துக்கு இருபது பைகளுக்கு மேல் சேர அதை யார் கண்ணிலும் படாமல் பத்திரப்படுத்தி வைக்க படாத பாடு படுகிறான் சிறுவனாக இருக்கும் வரை. இருபது வயதுக்கு மேல் பெற்றோரிடமிருந்து பிரிந்து வரும்போது மூன்று பெட்டி நிறைய நகங்களை கொண்டு வருகிறார். பயமின்றி நகங்கள் இருக்கும் பைகளை எடுத்து தேதி வரிசைப்படி அடுக்கி வைக்கிறார் தனது இடத்தில்.

பொக்கிஷம் போல பாதுகாத்து வரும் நகைகளை கவரில் போட்டு வைக்க மனமில்லாமல் 500 சிகரெட் பெட்டி வாங்குகிறார்.பின் அதில் அழகாக வரிசைப்படி நீண்ட நாட்கள் செலவழித்து அடுக்கி முடிக்கிறார். அப்போது அவரை பற்றி அவரே பெருமிதமாக உணர்கிறார். அடுக்கி முடித்து அந்த வரிசையை பார்க்கும்போது அழகாக தெரிய அந்த பெட்டியின் அழகுக்கு ஆசைப்பட்டு யாராவது எடுத்துக்கொண்டு போய்விடுவார்களோ, உள்ளே விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் என திறந்து பார்த்து ஒன்றுமில்லை நகங்கள் மட்டுமே இருப்பதை கண்டு தூக்கி எறிந்து சென்றுவிடுவார்களோ. அவர்களை பொறுத்த வரை இது குப்பை ஆனால் எனக்கு  என்று யோசிக்கும்போதே திகிலடைகிறார்.

உடன் அந்த பெட்டிகளை காப்பாற்ற வங்கியில் லாக்கர் வாடகைக்கு எடுக்கிறார். அதில் கொண்டு போய் சேர்த்தவுடன் நிம்மதி பெருமூச்சுவிடுகிறார். பின் மாதம் இரண்டு முறை புதிய நகங்களை வைத்துவிட்டு சரிபார்த்துவிட்டு வருவார். திடீரென ஒரு நாள் தம் வாழ் நாள் முழுவதும் வெட்டும் நகங்களை சேகரிக்க வங்கி பெட்டகம் போதுமா என்ற சந்தேகமும், தான் இறந்த பின் தன் நகங்களுக்கு என்ன நடக்கும் என்ற சந்தேகமும் மனதில் விஸ்வரூபமெடுக்க நிம்மதியின்றி பலவாறு பலநாள் யோசனைகள் செய்து வருகிறார்.
முடிவில் திடீரென அவருக்கு ஒரு ஞானோதயம் தோன்றுகிறது. நான் மரணமடைந்தால் தானே என் நகங்கள் பாதுகாப்பு குறித்து பயப்பட வேண்டும். நான் இறக்கவே கூடாது என்று முடிவெடுக்கிறார்.

இந்த கதை சொல்ல வரும் நீதியெல்லாம் வாசிப்பவர்களை பொறுத்து.. 


 லிங்க் http://www.infinityplus.co.uk/stories/fingernails.htm 


தமிழில் : க. ரகுநாதன் மொழி பெயர்த்திருக்கிறார். 


No comments:

Post a Comment