Friday 6 February 2015

பிப்ரவரி கவிதைகள்

உடைந்த மனதின்
ஒவ்வொரு துளியிலும்
உடையா காதல்.

******************

அலையென நெஞ்சில்
எழும் உணர்வுகள்
மென் முத்தத்தில்
கரையும் மௌனங்கள்
இறுகிய அணைப்பில்
உடைபடும் வார்த்தைகள்
கொடுக்கவும் எடுக்கவும்
இயலாமல்
கரைபுரண்டோடும் காதல்
ஆசீர்வாதமாய்
தழுவிசெல்லும்
மென்காற்று...

***************

பின்மாலைப்பொழுதில்
எனை மறந்து பேசிய கணங்களை
சிந்தாமல் சிதறாமல்
சேகரிக்கிறேன்
சேர்த்த வார்த்தைகளின்
சுமை தாளாமல்
சோர்ந்துவிடும் போதெல்லாம்
வார்த்தைகளே சோர்வை
நீக்கும் மாமருந்தாய்
ஆறா ரணங்களில்..


***************

நம் உலகுக்குள் நமையன்றி
யாருமில்லை என
பிதற்றிய பொழுதுகளில்
எனக்குள் இருக்கும் உலகும்
உனக்குள் இருக்கும் உலகும்
அர்த்த புன்னகையுடன்
தமக்குள் சிரித்ததை
கவனிக்கவேயில்லை


********** 

எழும் முன்னும்
விழும் முன்னும்
எண்ணங்களில் மிதந்து
கண்ணில் நிறைந்து
மனதில் உறைகிறாய்.

****************
 

No comments:

Post a Comment