Tuesday 3 November 2015

இது தான் வாழ்கை - பஞ்சாபி கதையின் மொழிபெயர்ப்பு



இதுதான் நம் வாழ்க்கை தலீப் கௌர் டிவானா எழுதிய பஞ்சாபி நாவலின் மொழிபெயர்ப்பு. நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு.எனக்கு மொழிபெயர்ப்பு நாவல்கள் மேல் தனி மோகமுண்டு. மொழி பெயர்ப்பின் மூலம் முற்றலும் நமக்கு தெரியாத மொழி பேசும் மக்களின் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் எல்லாம் தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம். மொழிப்பெயர்ப்பு உணர்வை துல்லியமாக பிரதிபலிக்காது என்ற கூற்று இருக்கும்போதும் வேறு ஒரு மொழி இடம் சார்ந்த வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் மொழிப்பெயர்ப்பின் மீது ஈர்ப்பு குறையாமல் வைத்திருக்கிறது.

பானோ என்கிற விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் கங்கையில் தற்கொலைக்கு முயல அவளை நாராயணன் என்கிறவன் காப்பாற்றி அவன் வீட்டுக்கு கூட்டி வருவதில் கதை தொடங்குகிறது. பானோ ஏற்கனவே திருமணமானவள் கணவர் இறந்துவிட கணவரின் தம்பிகள் அவளை அடைய முயற்சிக்க அது பிடிக்காமல் அப்பா வீட்டுக்கு வருகிறாள். ஒரே தம்பி நோய வாய்ப்பட்டு கிடக்க அவனுக்கு வைத்தியம் செய்வதில் அவர் தந்தை தன்னிடம் இருக்கும் எருது, நிலம் எல்லாம் வைத்தியத்துக்காக செலவு செய்தும் அவன் பிழைக்காமல் இறந்து விடுகிறான். 

அந்த ஊரில் பெண்களை விற்கும் பழக்கம் இருக்கிறது. பானோவின் தந்தை அவளை விற்றுவிட முனைய அப்போது தான் கங்கையில் உயிரை மாயத்து கொள்ள முயற்சிக்க காப்பாற்றபடுகிறாள் நாராயணனால். நாராயணனும் குடிகாரம் ஹூக்கா, மது என்று போதையில் கிடப்பவன். பெண்கள் யாருமில்லாத அந்த வீட்டுக்கு வரும் பானோ அந்த வீட்டை சீராக்குகிறாள். இவன் குடிகாரன் என்பதால் குத்தகைக்காரர்கள் சரியாக கணக்கு தராமல் ஏமாற்ற இவள் எல்லாம் சீராக்குகிறாள் ஆனாலும் நாராயணனிடம் மனம் ஒட்டாமல் அவள் முன்னாள் கணவன் சரவணன் நினைவிலேயே இருக்கிறாள். அவனுக்கு மனைவியாக இல்லாமல் ஆனால் அந்த வீட்டில் ஒருத்தியாக ஒன்றுகிறாள். நாராயணன் எவ்வளவு முயற்சித்தும் அவனிடம் ஒட்டாமல் இருக்கிறாள்.

நாராயணின் குடிகார நண்பர்கள் ஆசை காட்டி அவளை இழுக்க முயற்சிக்க அவர்களிடம் இருந்து போராடி தப்பிக்கிறாள். அதன் பின் குருத்துவாரிலேயே பலியாக பூசை பஜனை என்று இருக்க அந்த பூசாரியும் ஒரு நாள் அவளை அடைய முயற்சிக்க அங்கு போவதையும் குறைத்து கொள்கிறாள். இதற்கிடையில் அவள் கணவர் வாரிசுக்காக வேறு திருமணம் செய்து கொள்ள போவதாக சொல்கிறான்.
திக்பிரமை பிடித்தாற்போல பானோ வீட்டு வேலைகள் செய்ய மயக்கமுற்று கீழே விழுந்து மண்டை உடைகிறது. மருத்துவமனையில் ஒன்றரை மாதம் போல தங்கி சிகிச்சை பெறுகிறாள். தினமும் சாப்பாடு கொண்டு வந்து தருகிறான் நாராயணன். சிகிச்சை முடிந்து வீடு வரும் போது வேறு ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்திருப்பது தெரிகிறது. மனம் கனக்கிறது எதுவும் செய்ய இயலா கையாலாகாத்தனத்துடன் தன படுக்கையை மொட்டை மாடிக்கு மாற்றி கொள்கிறாள்.

குழந்தை பிறக்கிறது. இவள் இளைய தாரத்தின் ஏச்சுக்கும பேச்சுக்கும் ஆளாகிறாள். கடைசியில் நாராயணன் பாவனாவை வேறு ஒருவனுக்கு விற்று விடுகிறான். வாங்குபவன் வரும் போது உணர்ச்சியற்று நடை பிணமாக அவன் பின் செல்கிறாள். 

இது கதை மட்டுமே இதில் எழுத படிக்க தெரியாமல் வீட்டு வேலைகள் செய்வது மட்டுமே தெரிந்த பஞ்சாப் கிராமத்து பெண்களின் நிலை கண் முன் விரிகிறது. ஏறக்குறைய அநேக இந்திய பெண்களின் நிலை சற்று முன்பின்னாக இப்படி தான் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த நாவலில் ஸிந்தியாக வரும் பக்கத்து வீட்டு பெண்ணும் பாவனாவும் உரையாடும் இடங்களில் எல்லாம் பெண்களின் அறியாமையும், ஆண்களை சார்ந்திருக்கும் பெண்களின் நிலையும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம். நாராயணன் குடித்து வந்து பாவனாவை அடிக்குமிடம் அனாதையாக போக்கிடம் இல்லாத பாவனா கங்கையிலேயே மூழ்கி செத்திருக்கலாம் உயிரோடு இருப்பதனால் என்ன சுகம் என்ற ரீதியில் சிந்தனை ஓடவிட பெண்களின் நிலை மனதை அழுத்துகிறது.

நாராயணன் ஒன்றும் கொடுமைக்காரன் இல்லை பாவனாவிடம் அவன் நன்றாக தான் பேசுகிறான் அன்பாகவும் இருக்கிறான் என்கிற போதிலும் அவளை பற்றி அவன் குடிகார நண்பன் சொன்ன பேச்சை கேட்டு அடிக்கும்போதும் பின் தவறு உணர்ந்து அவளுக்கு ஒத்தடம் கொடுப்பதும் அவன் திருமணம் செய்து கொள்வதும் புதிதாக வந்தவள் கொடுமைப்படுத்த அவளை கண்டித்து பாவனாவிடம் இரக்கம் காட்டினாலும் கையாலாகாதனத்துடன் அவளை வேறு ஒருவன் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் அங்கு ஆண்கள் எல்லாம் இப்படி தான் இதெல்லாம் சகஜம் தான் என்று ஆசிரியர் சொல்லி இருப்பதன் மூலம் சராசரி இந்திய ஆணின் மனநிலையை நாராயணன் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

1 comment:

  1. இது கதை மட்டுமே இதில் எழுத படிக்க தெரியாமல் வீட்டு வேலைகள் செய்வது மட்டுமே தெரிந்த பஞ்சாப் கிராமத்து பெண்களின் நிலை கண் முன் விரிகிறது. ஏறக்குறைய அநேக இந்திய பெண்களின் நிலை சற்று முன்பின்னாக இப்படி தான் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

    ReplyDelete