Tuesday 3 November 2015

பேரன்பு

காற்றில் கரையும் கற்பூரமாய்
காணாமல் போகிறாய்
அழுது உருகி ஈரம் வற்றி
பாலையாய் வெடித்து
ஏகாந்தம் நோக்கி
வெறித்து கிடக்க
எதிர்பாரா தருணமொன்றில் பெருமழையென பொழிந்த
உன் அன்பில்
குழைந்த கணத்தில்
விரிசல்கள் சுவடற்று மறைய
குளிர்ந்து முளைக்க தொடங்குகிறது
பேரன்பின் விதை

No comments:

Post a Comment