Thursday 31 March 2016

துளிகள்

ஆககி்ரமிக்கப்படுவதை உணராமலே 
ஆககி்ரமித்துவிட்டதாக
உனக்குள் புன்னகைப்பதை
மௌனமாக பார்க்கிறேன். :) 

========

கரைந்து போகும் மனமில்லாமல்
கரைய வைக்கும்
எண்ணமுமில்லாமல்
முழுமையை தேடும்
முயற்சியை விடாது தொடரும்
விசித்ர மனம். . 


===============

சொல்ல தயங்கிய வார்த்தைகள் 
நிர்ணயிக்கின்றது
நமக்கான நெருக்கத்தையும் தூரத்தையும்.

=============

மிகப்பெரும் பரவசமும், சோர்வும் நாணயத்தின் இருபக்கமாக தான் பயணிக்கிறது. சுண்டிவிடுபவர்களுக்கும் தெரிவதில்லை எந்த பக்கம் விழும் என்று..

================

விழி சொல்லாததையா மொழி சொல்ல போகிறது...

======


கொல்லத் துணிந்த பின்
கருணை காண்பித்து பயனில்லை.
உன் பார்வையில்
மறைத்து வைத்த
என் பார்வையை
கண்ணாடி விலக்கி காட்டுகிறேன்.
சிக்கிக் கொள்ளாமல் இருக்க
சிரமப்பட்டு சுதாரிக்கும் முன்
புன்னகையை ஈட்டியாய்
சொருகுகிறேன்.
வறண்டு தவிக்கும் இதழை
என் இதழ் ஈரத்தால்
ஒற்றி எடுத்த கணத்தின்
விழி வீச்சில் மயங்கியிருக்க
ஆயுதமில்லா யுத்தத்தில்
கண்களையும் புன்னகையும்
ஆயுதமாக்கி மென் முத்தத்தில்
வெற்றியை கைகொள்கிறேன்.
==============

smile emoticonsmile emoticonsmile emoticon


No comments:

Post a Comment