Wednesday 4 October 2017

உயிர் தப்பிய வாங்-ஃபோ - ப்ரெஞ்ச் சிறுகதை

ப்ரெஞ்ச் கதைகளை ஸ்ரீராமின் மொழிப்பெயர்ப்பில் நம்பி வாசிக்கலாம். ஸ்ரீ ராமின் உறுத்தாத மொழிப்பெயர்ப்பு கடினமான கதைக்களத்துக்குள்ளும் நம்மை பயணிக்க செய்யும்.  கீழை நாட்டு கதை தொகுப்பில் மார்கெரித் யூர்ஸ்னார் எழுதியஉயிர் தப்பிய  வாங்-ஃபோசிறுகதை கலையின் எழுச்சியை பேசுகிறது. வாங்-ஃபோ என்ற முதிய ஓவியன். அவன் க்ளப்பில் குடித்துக்கொண்டிருக்கும்போது அவனை சேஃப் சோனில், பதினைந்து வயதில் திருமணம் முடித்து, இளம் மனைவியுடன் அமைதியான (அவனுக்கு கற்பிக்கப்பட்ட) வாழ்க்கை வாழும் பணக்கார வீட்டு பிள்ளை, எதிர்பாராதவிதமாக சந்திக்கிறான். ஓவியனுடன் பேச, அவனின் பேச்சாலும், ஓவியத்தாலும் ஈர்க்கப்படுகிறான். அதன் பின்னர் வாழ்க்கை குறித்த அவனது பார்வையே மாறுகிறது.

ஒவியனை வீட்டுக்கு வரவழைக்கிறான். அந்த முதிய ஓவியனுக்கு சிஷ்யனாக சேவை செய்கிறான். இவனின் இளம் மனைவி இவன் பழைய மாதிரி இல்லாததால் தூக்கு போட்டு சாகிறாள். அதையும் ஓவியமாக தீட்டுகிறான். அப்போது கூட அவள் கணவன் அழாமல் தூரிகைக்கு வண்ணம் குழைக்கும் வேலையை செய்கிறான். அவன் ஓவியம் வரைவதற்கான பொருட்கள் வாங்க தன்னுடைய அடிமைகள், சொத்துகளை இழக்கிறான். இறுதியில் இழக்க ஒன்றுமில்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

அந்த முதிய ஓவியனுக்கு சிருஷ்டை செய்கிறான் இளைஞன் . நாடோடிகளாக திரிகிறார்கள் இருவரும், ஒவியன் வரைந்து தள்ளுகிறான். முடிக்கபடாத ஓவியங்கள் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. ஒருகட்டத்தில் தன்னுடைய குருவுக்காக உணவை கூட திருடி வருகிறான் இளைஞன். அன்றைய இரவு காவலர்களால் கைது செய்யப்பட்டு இருவரும் அரசன் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

அரசன் ஓவியனை நீ பொய்யான உலகத்தை சிருஷ்டிக்கிறாய் உன் கற்பனையால், ஆனால் நிஜமான உலகம் அதிர்ச்சியடைய வைக்கிறது. ஒரு பைத்தியக்கார ஓவியனால் வெற்று வெளியில் அள்ளித்தெளிக்கப்பட்டு, நம்முடைய கண்ணீரால் ஓயாமல் அழிக்கப்பட்டுகொண்டிருக்கும் குழப்பமான வண்ணக்கறைகளின் ஒரு திரட்டுதான் உலகம்.  ஆனால் நீ  தூரிகையில் காண்பிக்கும்  உலகம், என்னுடைய உடைமைகளின் மேல் வெறுப்பை உண்டாக்கி , என்னால் பெற முடியாதவற்றின் மேல் என் ஆசையை தூண்டிவிட்டன. அதனால் உன்னுடைய கண்களை சுட்டு பொசுக்குவதுடன், உன்னுடைய கைகளையும் வெட்ட ஆணையிடுகிறேன் என்கிறான்.

தன்னுடைய குருவை அபாண்டமாக பேசியதால் கோபம் கொண்ட இளைஞன், மன்னர் மேல் பாய, அவன் தலை கொய்யப்படுகிறது. அவன் துடித்து இறக்க, அவனின் ரத்தம் பரவுவதையும் ஓவியமாக பார்க்கிறான் ஒவியன். இறுதியாக முடிக்கப்படாத ஒரு ஓவியத்தை அவன் வரைந்தபின் ஒவியனுக்கான தண்டனையை நிறைவேற்ற ஆணையிடுகிறான் அரசன். அந்த ஒவியத்தை வரையும் போது ஓவியனின் மனநிலை, ஓவியம் முடித்த பின் நடப்பதம், கதையின் முடிவும் வாசகனினிடம் பல்வேறு சிந்தனையை கிளர்த்துகிறது.  



No comments:

Post a Comment