Wednesday 29 October 2014

மழை

பெருமழைக்கு பயந்து 
விரைந்து செல்லும் வாகனங்கள்
மரம் தேடி ஒதுங்கும் மனிதர்கள்
துள்ளலுடன் ரசித்து செல்லும் யுவதி
குதூகலத்துடன் அம்மாவின் 
கைப்பிடி உதறி குடைக்கு வெளியே
எட்டி பார்க்கும் சிறுபிள்ளை
வியாபாரத்தை கெடுத்துவிட்டதாக
புலம்பும் தெருவோர கடைக்காரர்
டீக்கடையில் நிதானமாக
தேநீர் அருந்தியபடி
போவார் வருவோரை
கண்களாலும் தன் அனுபவத்தாலும்
அளக்கும் மத்திம வயதுக்காரர்
எல்லாரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே
அகத்தின் அரற்றும் அழுகுரல் மறைத்து
நானும் கடந்து செல்கிறேன்.....

No comments:

Post a Comment