Monday 15 February 2016

கட்டுண்ட காதல்

ஒற்றை ரோஜாவுக்கு ஏங்கியதில்லை
அழகின் சிகரமென்ற பொய்யுக்கும் மயங்கியதில்லை
அள்ளி அள்ளி வழங்கிய பரிசுகளில் பூரித்ததில்லை
தேகம் சிலிர்க்க வைத்த தீண்டலில்
கிறங்கி கரைந்துவிடவில்லை
வெளியே சொல்லமுடியா
பயத்தில் அடிவயிறு கலங்கி
பதட்டத்தில் என் கைகளுடன் குரலும் நடுங்க தட்டு தடுமாறி
மருண்ட பொழுதினில்
பேசிய ஆறுதல் வார்த்தைகளில்
கட்டுண்டு கிடக்கிறது
என் காதல்.,.

1 comment: