Monday 15 February 2016

நகர்தல்

தளைகள் மெல்ல மெல்ல அறுபட
வேகமாக ஒடத்தொடங்குகிறேன்.
எல்லைகள் வரையறுக்காமல்
சூழலுக்கு தக்க பொருந்திபோகும்
விவேகத்திலும்
என்னை தொலைத்திடாமல்.
பாதைதெரியா பயணத்தில்
பாலைகள் சோலைகள்
வித்தியாசம் தெரியா
இருளில் முட்டிமோதி
சோர்ந்து விழுந்த போதும்..
வீழ்ந்து கிடக்க விருப்பமில்லாமல்
தட்டுதடுமாறி எழுந்து நிற்க
அனுபவ வெளிச்சம்
கொஞ்சம் வழிகாட்ட
எட்டுதிக்கும் நகர்கிறேன்.
குறிக்கோளில்லா பயணம் பாழ் என யார் சொன்னது
நகர்வே பிரதான சந்தோஷம்...

No comments:

Post a Comment