Monday 15 February 2016

துரோகம்

நட்பின் துரோகம்
காதலின் துரோகத்தை விட
ருசியானது.
ருசிக்காமல் இருக்காதீர்கள்.
காதலின் துரோகம்
உயிர் பிரியும் வலியைவிட
வீரியமானது.
அனுபவிக்காது இருந்துவிடாதீர்கள்.
துரோகத்தின் ருசியையும்
உயிர் பிரிதலை விட வீரியமான
வலியையும்
சந்தித்த பின் கிட்டும்
ஏகாந்தம் ஆனந்தம்!!
பின் வாழ்தல் எளிது!
அனுபவமில்லாதோர்
வாழவே தொடங்கவில்லை
மெல்ல வரட்டும்
நான் தனித்து பதிக்கும் தடத்தினூடாக...

1 comment:

  1. Padhividaamal droaganagalai rusithavargal undandro...ennai poandru...Emotional Immunity kidaikka petravan sila dhroganagalaal...

    ReplyDelete