Monday 15 February 2016

காட்டாறு

காட்டாறின் கதை அறிந்தவர்
கால் வைக்கவும் அஞ்சிடுவர்
காய்ந்திருக்கும் பொழுதில்
கால் நனைப்பவரும்
காத தூரம் கூட பயணிப்பதில்லை
நீந்த தெரியும் என்ற மமதையுடன்
இறங்கியவரும்
சட்டென பெருகும் வெள்ளத்தில் நிலைகுலைய
பயமின்றி
நீரின் போக்கில் பயணிப்பவரை மட்டும்
பத்திரமாக கரை சேர்த்து
தன் வழி செல்கிறது ..

No comments:

Post a Comment