Wednesday 3 December 2014

தூண்டில்

புழுவுக்கு ஆசைப்பட்டு
தூண்டிலில் சிக்கும் மீன்
சேருமிடம் அறிவதில்லை..

கசாப்பு கடையோ
அழகிய மீன்தொட்டியோ
மரணம் உறுதி..


முன்னதில் வலி சில விநாடி
பின்னதில் தவணை முறையில்
மரணம் நேரும் வரை..

பின்னால் வரும் மரணத்தையும் வலியையும்
சற்று நேரம் மறக்க செய்கிறது
கண்ணின் முன்னால் ஆடும் புழு..

No comments:

Post a Comment