Thursday 11 December 2014

ஐ லவ்

லேனா தமிழ்வாணன் பேசி நான் சிறுவயதில் கேட்டது

ஒரு வருடத்தின் அருமை தெரிய வேண்டுமென்றால் தேர்வில் தோல்வியடைந்தவரிடம் கேள்
ஒரு வாரத்தின் அருமை தெரியவேண்டுமென்றால் ஒரு பத்திரிகை ஆசிரியனை கேள்
ஒரு நிமிடத்தின் அருமை தெரிய வேண்டுமென்றால் ரயிலை தவறவிட்டவனை கேள்
ஒரு மைக்ரோ செகன்ட்டின் அருமை தெரியவேண்டுமென்றால் ஓட்டபந்தயத்தில் இரண்டாவதாக வந்தவனை கேள் என்று

அது போல சுதந்திர தினத்தின் அருமை தெரியவேண்டுமென்றால் ஏதோவொரு காரணத்தினால் அடிமைகளாக அல்லது கிட்டதட்ட அடிமைதனத்தில் இருக்கும் நாடுகளில் சென்று சில நாட்கள் தங்கி இருந்து வாருங்கள்.. அப்போது சுதந்திரத்தின் அருமை புரியலாம்..

உலகளவில் ஒரு சாதனை நிகழ்த்தியவர் பெயர் சொல்லும் போது அவர் இந்தியர் என்றோ இந்திய வம்சாவளி என்றோ சொல்லும்போது நமக்குள் நம்மையறியாமல் ஒரு சந்தோஷ கீற்று எட்டி பார்க்கிறதே.. மாஸ்டர் செப், புதிர் போட்டிகள் ,அந்நிய டிவி ஷோக்களில் பார்க்கும்போது வெற்றி பெற்றவர் இந்தியர் எனும்போது சொல்ல முடியா சந்தோசம் வருகிறதே.. இதெல்லாம் யாரும் சொல்லி வருவதில்லை.. தானாக எழும் உணர்வு..

proud to be indian...I ♥ India

No comments:

Post a Comment