Thursday 11 December 2014

சிந்து பைரவி - திரைப்படத்தின் இரு காட்சிகள் பற்றி ஒரு சிறு நுணுக்கமான பார்வை.

:

காட்சி 1: அறிவு கம்மி, ரசனை கெட்ட ஜென்மம், முட்டாள் என்று கதை நாயகன் "ஜே.கே.பி. " யால் நினைக்கப்படும் கதாபாத்திரமான சுலோக்சனா. ஒரு காட்சியில் நாயகன் லதா மங்கேஷ்கர் வரிகளில் லயித்து மூழ்கி இருக்க சுலோக்சனா வெளியூர் புறப்படும் கணவருக்கு பருப்பு பொடி தயாரிப்பதற்காக மிக்சியை ஓட விட அது தொந்திராவாகிவிட்டது என்று நாயகன் நாயகியை கடிந்து கொள்ள நாயகி ஒரே கேள்வியில் அசால்ட்டாக உறைய வைத்து செல்வார். 'லதா மங்கேஷ்கர்" ரா நாளைக்கு உங்களுக்கு பருப்பு பொடி அரைத்து தருவார் என்று... அந்த கேள்விக்கு பின் இருக்கும் உண்மை முகத்தில் அறைய வைக்கும்.

காட்சி 2: படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டாம் திருமணம் பற்றி எல்லாரும் பேச அதற்கு இன்னொரு நாயகி சொல்லும் வசனம்... நாளை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க விரும்பும் பலரும் "ஜே. கே.பி" ஏ இரண்டாம் தாரம் பண்ணிக்கிட்டாரு என்று தப்பான முன்னுதாரணம் காட்ட நான் காரணம் ஆக வேண்டுமா என்று கேள்வி முன் வைப்பார்..தன் வாழ்க்கையை விட தான் தவறான முன்னுதாரணமாகிவிட கூடாது என்ற தெளிவு..

படத்தை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.. ஆனால் தவறான முன்னுதாரணமாக தான் இருக்க கூடாது என்ற பொறுப்பு எத்தனை பேரிடம் இருக்கிறது...:) :) :)

No comments:

Post a Comment