Friday 18 September 2015

மனதின் ஓரத்தில்

வட்டம், கட்டத்திற்குள் அடங்காமல்
நேர்கோடாகவும்
சில சமயம் வளைந்தும், நெளிந்தும்
மேடு பள்ளம் குதித்தும்,விழுந்தும்
விழுந்த வேகத்தில் எழுந்துமாய்
வாழ்க்கையை வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன் .


சாதனையும் செய்யவில்லை
சாதிக்கும் எண்ணமும் ஏதுமில்லை ..
வரலாற்றில் பேர் இல்லாவிட்டால் என்ன
யாரோ ஒருவரின் மனதின்
ஒரு மூலையில் இருந்து கொண்டேயிருப்பேன்
காரணமேதும் இல்லாவிட்டாலும் ..

No comments:

Post a Comment