Tuesday 29 September 2015

எதிர்பார்ப்பு

அதிகாலையின் அழகை
மாலை வெயில் வரையும் ஓவியத்தை
முழங்கா இரவின் ஓசையை
முற்றுப்பெறா கவிதையின் தவிப்பை
முயங்கிட தவிக்கும் காதலை
மழலலைகளின் வெட்கத்தை
மனதை கரைக்கும் இசையை
மௌனிக்க வைக்கும் உன் பார்வையை
இதழோரம் மின்னும் குறுநகையை என
பகிர ஆயிரமுண்டு
கேட்கும் மனதும்
உணரும் இதயமும்
வாய்க்கும் பொழுதுகளை
எதிர்பார்த்தபடி
கடக்கிறேன் இந்த நாளையும்.

No comments:

Post a Comment