Wednesday 26 November 2014

"சுமித்ரா" - கல்பட்டா நாராயணன் - தமிழில் கே.வி. ஷைலஜா

"சுமித்ரா" கல்பட்டா நாராயணன் எழுதி கே.வி. ஷைலஜாவால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நாவல். வம்சி வெளியீடு..இந்த புத்தகம் ஒரு நண்பர் வீட்டில் எதேச்சையாக புரட்டி பார்க்க வாசிக்க தொடங்கிய போதே சுமித்ராவை முழுதும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.

கதையின் ஆரம்பம் சுமித்ரா என்கிற முப்பத்தி எட்டு வயது பெண் இறந்து கிடப்பதில் தொடங்குகிறது.அவளின் இறப்பு செய்தி கேட்டு அவளை பார்க்க வருபவர்களின் பார்வையில் சுமித்ரா வாழந்த கால கட்டம் கொண்டு வரப்படுகிறது.அவளின் கணவன், அவள் நண்பன், தோழி, அவள் பழகும் இயல்பான அக்கம் பக்கம் மனிதர்களின் பார்வையில் என்று அழகாக நகர்கிறது.

கதை வாசிக்கும்போது நம்மை அறியாமல் நாமும் சுமித்ராவின் வாழ்க்கைக்குள் சென்று உட்கார்ந்து கொள்கிறோம். அதில் வரும் "புருசோத்தமன், கீதா, மாதவி, கருப்பி, பாத்திரம் விற்கும் பொதுவாள், மறக்கவே முடியாத தாசன் என்று கதை மாந்தர்களும், பழங்கலம் வீடும் திண்ணையும், அவர்களின் உணவும், எல்லாம் எல்லாம் சேர்ந்து மனதுக்கு சொல்ல முடியா சுகந்தம் தருகிறது.

சுமித்ரா இறந்துவிட்டாள் என்று ஆரம்பிக்கும் கதையை வாசித்து முடிக்கும் போது சுமித்ரா உயிர்பெற்று நம்மிடம் வாழ தொடங்குகிறாள்.... கவித்துவமான எளிமையான நாவல்...

No comments:

Post a Comment