Wednesday 26 November 2014

"கிளியோபாட்ரா" ஆசிரியர் முகில்

கிழக்கு பதிப்பக வெளியீடான “ கிளியோபாட்ரா “ முகில் எழுதியது... இவருடைய “ யூதர்கள்” வாழ்க்கை வரலாறு புத்தகம் போன வருடம் கண்காட்சியில் வாங்கி வாசித்து இருக்கிறேன்.. எழுத்து நடையும் அதில் தொகுக்கப்பட்டு இருந்து வராலாற்று குறிப்புகளும் யூதர்களின் வாழ்க்கை முறையை இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனையின் வேர் எங்கிருந்து என்பது வரை அறிந்து கொள்ள முடிந்தது..

அதனால் “கிளியோபாட்ரா” முகில் எழுதியது என்றவுடன் வாங்கி விட்டேன்.. நேற்று மாலை வாசிக்க தொடங்கி இன்று காலை வாசித்து முடித்துவிட்டேன்.. கிளியோப்பட்ரா அழகி என்பதால் சீஸர், ஆண்டனி உட்பட மன்னர்கள் அவள் அழகில் அடிமைகளாக சாம்ராஜ்யம் இழந்ததாக வரலாற்றில் ஒற்றை வரியில் தெரியும்.. 

ஆனால் அதற்கு பின் இருந்த அந்த எகிப்திய அரசியின் ஆளுமை, தான் சொல்வதை மற்றவர்களை ஏற்றுகொள்ள செய்யும் சொல் வலிமை, அன்பால் காதலால் அடிபணிய செய்யும் வித்தை எப்படி நடந்துகொண்டால் காரியம் நடக்கும் என்ற புத்திகூர்மை. அவளது வாசிப்பு அறிவு..(எகிப்தியன் உட்பட ஆறு மொழிகள் சரளமாக பேச எழுத கற்றவள்) இவை எல்லாம் தான் அவளை பேரழகியாக உலகம் போற்ற செய்து இருக்கிறது.. அவளை பற்றிய ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் எகிப்திய மக்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறாள்... அவள் இறந்து இத்தனை வருடம் கழித்தும் இன்னும் அவரின் புகழ் மங்காமல் அவரை பற்றி இன்னும் வியக்க பேசவும் ஆராயவும் வைத்து கொண்டு இருப்பதே அவரின் ஆளுமையை காட்டுகிறது... வாசிக்க வேண்டிய புத்தகம்....

No comments:

Post a Comment