Wednesday 26 November 2014

"தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை" - ஆசிரியர் அ. முத்துலிங்கம்

உலகின் பல நாடுகளை பணி நிமித்தமாக சுற்றி வந்திருக்கும்  ஆசிரியர் அங்கு வாழ்ந்த மனிதர்கள் அவர்கள் கலாச்சாரங்கள் பழக்க வழக்கங்கள் பற்றி சுவைபட  இந்த புத்தகத்தில் கூறுகிறார் ...அதில் மேற்கு ஆப்பிரிக்கா பற்றி அவர் கூறியிருக்கும் இரண்டு சம்பவங்கள் அவரை மட்டுமல்ல நம்மையும் அதிசயிக்க வைக்கிறது...

ஆப்பிரிக்காவுக்கு வேலை நிமித்தமாக சென்ற போது எனக்கு ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி சொல்லி மாளாது. மேற்கு நாடுகளில் அதிர்ச்சி அவ்வளவு சொல்லும் படியாக இருக்காது. புத்தகங்கள் வாயிலாகவும் சினிமா வாயிலாகவும் நாம் நிறைய அறிந்துவைத்திருப்பதால். நான் மேற்கு ஆப்ரிக்காவில் நேரில் பார்த்து அதிசயித்த இரண்டு சம்பவங்களை சொல்கிறேன்.

ஒரு கடையில் வேலை பார்த்த இந்தியர் இறந்துவிட்டார். இங்கு இறந்தவர்களை சில நாட்கள் வைத்துவிட்டுப் பிறகு தான் புதைப்பார்கள். இந்தியரின் பிணத்தை இறந்த அன்றே மயானத்தில் எரித்துவிட்டார்கள். இதை பார்த்து ஆப்பிர்க்கர்கள் மிரண்டு போனார்கள். எட்டத்தில் நின்று பார்த்தார்கள். அவர்கள் கண்கள் குத்திக்கொண்டு நின்றன.

ஒரு ஆப்பிரிக்கர் பிறகு என்னிடம் பேசினார். இந்த இந்தியர்கள் மிகவும் கொடுமைக்காரர்கள். ஈவு இரக்கம் இல்லாதவர்கள், விறகுக்கட்டை எரிப்பது போல எரித்து தள்ளி விட்டார்கள். எங்கள் கிராமத்தில் மூன்று நாலு நாட்களாவது வைத்து மரியாதை செய்வோம். பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் இருதயத்தையோ , ஈரலையோ ஒரு சிறு பகுதி எடுத்து உட்கொள்வோம். அப்போது அவர்கள் என்றென்றும் எங்களுடன் ஐக்கியமாகி விடுவார்கள் அல்லவா? இந்த சிறு மரியாதை கூடவா மரணித்தவருக்கு செய்ய முடியாது என்றார். நான் என்னத்தை சொல்வது?

இன்னொரு சம்பவம். நான் வசித்த இடத்தில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் வைரங்கள் விளைந்தன. ஆற்று படுகையில் இவை விளைந்ததால் கிராமத்தவர்கள் சிறு சிறு கும்பலாக கூடி அரித்து எடுப்பதை பார்க்கலாம். ஒரு முறை காரில் செல்லும்போது இப்படி மூன்று இளம் பெண்கள் ஆற்றில் கரையில் அரித்தபடி நின்றார்கள். மேலே ஒரு சட்டையும் கீழே லுங்கி போல ஒரு லப்பாவை அணிந்து கொண்டு. அது அழகான காட்சியாக இருந்தது. மொழிபெயர்ப்புகக்காக சாரதியையும் அழைத்து கொண்டு படம் எடுக்கும் நோக்கத்துடன் அவர்களிடம் போனேன். அவர்கள் வெட்கப்பட்டு நெளிந்தார்கள். இது பெரிய ஆச்சரியம். ஏனென்றால் அப்படி வெட்கப்படுவது அங்கே வழக்கமில்லை..

பிறகு விஷயம் புரிந்தது. மரத்தின் பின்னே சென்று சர்ட்டை கழற்றிவிட்டு இயற்கையான பிறந்த அழகுடன் சிரித்தபடி போஸ் கொடுத்தார்கள். அவர்களுக்கு வெட்கமே இருக்கவில்லை.. வேலை செய்வதற்காக அவர்கள் அணிந்தது சர்ட். அசிங்கமாக அதை அணிந்தபடி படத்தில் காட்சி தர அவர்கள் விரும்பவில்லையாம்.

No comments:

Post a Comment