Wednesday 26 November 2014

டால்ஸ்டாய் சிறுகதைகள்

 " டால்ஸ்டாய் சிறுகதைகள்" தொகுப்பு ஒன்று வாசித்தேன்.. அதில் "சகோதரிகள்", " ஒரு ஏஞ்சலின் கதை" வாழ்வில் மட்டுமா வேற்றுமை" என்ற மூன்று சிறுகதைகளும் ஒவ்வொரு தளம்..

" சகோதரிகள்" கதையில் கப்பலில் நாலு வருடம் சுற்றும் ஒருவன் நான்கு வருடம் கழித்து தரையில் காலடி எடுத்து வைத்து உல்லாசமாக இருக்க பொது மகளிர் விடுதிக்கு நண்பர்களுடன் செல்கிறான் அங்கே தன் தங்கை என்று அறியாமலே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அவளிடம் பேசி கொண்டு இருக்கும்போது அவள் தங்கை என்று தெரிந்தவுடன் அதிர்ந்து அதன் பின் செய்யும் ரகளையுடன் முடித்து இருக்கிறார்..

எனக்கு மிகவும் பிடித்தது " " ஒரு ஏஞ்சலின் கதை" ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் கதை.. " மனிதன் எதனால் வாழ்கிறான்? மனிதனுக்கு தெரியாமல் எது வைக்கப்பட்டிருக்கிறது? தாயும் தந்தையும் இல்லாவிட்டால் குழந்தைகள் உயிர் வாழுமா? எனபதை தெரிந்து கொண்டு வர கடவுளால் அனுப்பப்பட்ட அவரின் ஊழியர் ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி வீட்டுக்கு வந்து அவனுடன் இருந்து கேள்விகளுக்கு விடை தெரிந்து கொண்டு புறப்பட்டு செல்வது பற்றிய கதை...

மூன்றாவது கதை மனிதர்கள் வாழும் போது மட்டுமல்ல அவர்கள் சாவில் கூட எப்படி வேற்றுமை பணக்கார சீமாட்டி ஒருவர் இறப்பும், வண்டி ஒட்டி ஒருவரின் இறப்பும், இறந்த பின் முன்னவரின் கல்லறை கல் நடப்பட்டு இருப்பதையும் பின்னவரின் கல்லறையில் முளைத்து கிடக்கும் புல் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்த்துக்கான ஆதாரம் என்று சொல்லி ஒரு சிலுவையாவது நட்டு வைப்பதற்காக மரம் வெட்டி வர செல்லும் வண்டி ஓட்டியின் உறவினன் மரம் வெட்டுகிறான்..மரம் வீழ்ந்து கிடக்கிறது..

"உயிருடனிருந்த மரங்களில் இலைகளும் கிளைகளும் உயிரற்று கீழே கிடக்கும் வெட்டுப்பட்ட மரத்தை கண்டு மகிழ்ச்சியுடன் அசைந்தாடின" என்று முடித்திருப்பார்...
 
"டால்ஸ்டாய்" யின் புள்ளி குதிரை கதை படிக்க படிக்க உங்களை அறியாமல் அந்த குதிரையுடன் ஒன்றிவிடுவீர்கள்.. குதிரை தன் வரலாறை கூறுவது போல சொல்லி கடைசியில் அதை தோலுக்காக கொலை செய்து உரிக்கும் போது கூட அது அப்பாவித்தனமாக அதை உணராமல் ஒரு விடுதலை உணர்வுடன் இறப்பது என்று ரொம்ப அழகா சொல்லி இருப்பார்.. கண்டிப்பாக கதை வாசிக்கும்போது நீங்கள் உங்களை குதிரையாக உணர்வீர்கள்... மனதை பாராமக்கிய "புள்ளி குதிரை" .. இனி எங்கே குதிரை பார்த்தாலும் இந்த கதையில் உள்ள ஏதோ ஒரு வரி நினைவுக்கு வரும்..
 

No comments:

Post a Comment