Friday 28 November 2014

ஜனநாயகம்



ஜனநாயகத்தின் மிக பெரிய கோட்பாடு அல்லது ஆதார கொள்கை மக்களால், மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம். அதாவது நம்மால் நமக்காக நாமே தேர்தெடுக்கும் அரசாங்கம். மன்னராட்சி என்பது தனிப்பட்ட் ஒரு குடும்பத்தின் ஆட்சியாக சுய குடும்ப நலமாக போய்விdaட கூடாது என்று பொதுநல அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகத்தின் பேரால் இந்தியாவில் நடப்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

மன்னராட்சி என்றால் அதிகாரத்தில் யாரோ ஒருவர் சொல்வதை கடவுள் வாக்கு போல விருப்பம் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்கள் ஏற்று கொண்டே ஆக வேண்டும். மன்னரின் நலமே மக்கள் நலம். மன்னர் அவர் தம் குடும்பம் சுகமாக வாழ மக்கள் அடிமைகளாக உழைத்தே ஆகவேண்டும். உழைப்புக்கு தகுந்த கூலி பற்றி மூச் பேச கூடாது அதற்கு பதிலாக மன்னர் அவருடைய பிறந்த நாளிலோ அல்லது அவரது மகாராணி ஆசை நாயகி பிறந்தநாளிலோ, அல்லது பண்டிகைகளின் போதோ நாம் உழைத்து கொடுத்த பணத்திலிருந்து நமக்கு சாப்பாடு, துணிமணிகள் சில சமயம் ஏதோ கொஞ்சம் காசும் தருவார். நாம் உழைத்து கொடுத்ததை தான் அவர் தின்றது போக நமக்கு தருகிறார் என்று அறிவு கூட இல்லாமல் கிடைத்தற்கு மகிழ்ந்து பக்கத்தில் இருப்பவரை விட நமக்கு தேவலாம் என்று நம்மை போல கையேந்தும் இன்னொருவரை ஒப்பிட்டு திருப்தி அடைந்து விடலாம்.

இப்படியே இருந்துவிட கூடாது என்று சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒரு சிலரால் போராடி பெறப்பட்டது தான் ஜனநாயகம். ஆனால் அதன் பெயரால் நடப்பது என்ன? முன்பு மன்னருக்காக உழைத்த மக்கள் இப்போது கட்சிகளுக்காக. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியால் மக்களுக்கு என்ன கிடைக்கிறது? இதை மக்கள் யோசிக்கவே கூடாது. அப்போது தான் ஆட்சியாளர்கள் நிம்மதியாக இருக்க முடியும். மன்னராட்சி என்றால் சிரச்சேதமோ, கழுவேற்றமோ செய்து விடலாம் யோசிப்பவர்களை. ஆனால் ஜனநாயகத்தில் எல்லாருக்கும் கருத்துரிமை இருப்பதால் அது சாத்தியபடாது அதனால் என்ன செய்யலாம் சிந்திக்கவே விடாமல் செய்துவிடலாம். அவ்வப்போது நாயுக்கு எலும்பு துண்டை வீசுவது போல சில சில்ல்றைகளை இறைத்து மொத்தத்தை சுருட்டி கொள்ளலாம். அதற்கு மக்கள் மூளை சலவை செய்யப்பட வேண்டும்.

இலக்கியம், கலை, கதை  எல்லாம் உழைக்கும் மக்களின் களைப்பை போக்குகிறதா? மக்களை மெய் மறக்க செய்கிறதா? அப்போது அவைகளை வைத்தே மூளை சலவை செய்துவிடலாம். மெல்ல மெல்ல ஜனநாயகத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள இலக்கியம் கலைத்துறையில் இருப்பவர்களையே வைத்தே செய்யலாம். இலக்கியம் கலை கதை எல்லாம் உண்மை என்பது போன்ற மாயை உருவாக்கபப்ட்டது. மெல்ல மெல்ல அதை உருவாக்குபவர்கள் அல்லது அதில் பங்கேற்றவர்கள் கடவுளாக அலல்து கடவுள் போல சித்தரிக்கப்பட்டார்கள்.  அதன் பின் மக்களை சிந்திக்க செய்ய விடாமல் இருப்பது கடினமா என்ன? அவரவர் நம்பும் கதையின் நாயகர்களை தெய்வமாக்க அடுத்தவர்கள் நம்பும் நாயகர்கள் தெய்வம் இல்லை என்று நிரூபிக்க நடக்கும் சண்டையில் கடவுளர்கள் எல்லாம் சுகமாக குளிர் காய மக்கள் அவர்கள் நம்புவர்களை கடவுளாகக முனைப்பாக இருக்க அதை தாண்டி சிந்திக்க எங்கே நேரமிருக்கிறது??

மன்னராட்சி காலத்தில் பொங்கி போராடியவர்கள் கையில் சுலபமாக கலையும், இலக்கியமும் கொடுத்து நாயகர்களாக செய்துவிட்டார்கள். நாயகர்களை மக்கள் சிறு தெய்வமாக்கி கொண்டாட அந்த புகழின் மயகத்தில் இருந்து விடுபட முடியாமல் அவர்கள் அடிப்படை சிந்தித்தலே அடிப்பட்டு போய ஆட்சி செய்யும் கடவுளின் அடியாளாக மாறிப்போனார்கள். சிந்திக்க தெரிந்தவர்கள் எல்லாருக்கும் பதவி, பட்டம், பரிசு என்ற பெரிய பெரிய மீன்களும், மக்களுக்கு இலவசங்கள் என்ற சிறிய மீன்களும் வீசப்பட சுறாவை விழுங்கி ஏப்பமிட்டு கொண்டு சுகமாக ஆட்சியாளர்கள் .

மக்களின் சிந்தனை எல்லாம் யார் அதிக மீன்கள் (இலவசங்கள்) தருகிறார்கள் என்ற ரீதியில் மழுங்கடிக்கப்பட்டுவிட. சிந்திக்கும் தைரியமாக கருத்துக்களை முன்வைப்பவர்களும் அவர்களுக்கு ஆதாயம் தரும் கடவுளின் ஏஜெண்டுகளாக அவதாரமெடுக்க.அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை மக்கள் சமூகம் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சாத்வீகமாக நேர்மை, நியாயம் என்று போராடும் இவர்களை இந்த ஏஜென்ட்டுகள் பிழைக்க தெரியாத முட்டாள்கள் என்றும் கொஞ்சம் தீவிரமாக கருத்துக்களை முன்வைப்பவர்களை, போராடுபவர்களை தீவிரவாதி என்றும் முத்திரை குத்தி அதை தமது அறிவால் மக்களை நம்ப செய்யும் வேலைகளை செய்து வருகிறார்கள்..

ஆக மன்னராட்சி மக்களாட்சியாக மாறாமல் கட்சிகளின் ஆட்சியாகவும் இல்லாமல் கட்சியில் இருக்கும் ஒரு குடுமபத்தின் ஆட்சியாக மாற அந்த கட்சியின் தலைவர்கள் கடவுளர்களாக மாறி அவரவர் குடும்பம் சார்ந்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் எல்லா வளமும் நம்மிடம் இருந்து பிடுங்கி கொடுத்து செழிப்பாக நாம் எந்த கடவுளிடம் சொத்து அதிகம் என்று கணக்கெடுத்து இந்த கடவுளை விட அந்த கடவுளிடம் சொத்து குறைவு என்று சண்டையிட்டு கொண்டு இருக்கிறோம். அடிப்டையில் அந்த சொத்துக்கு சொந்தக்காரர்கள் யார் என்பதை மறந்து.

ஜனநாயகத்தின் நிலை இப்போது எதில் வந்து முடிந்திருக்கிறதென்றால் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்போம் என்ற நிலை போய் திருடியவர்களில் யார் குறைவாக திருடி இருக்கிறார்கள், அலல்து தவறு செய்தவர்களில் யார் குறைவாக செய்திருக்கிறார்களோ அவர்களை தேர்ந்தெடுப்போம் என்ற நிலையில். ஆட்சியாளர்கள் அபாரமாக தங்கள் உணர்ச்சி பேச்சுக்களால் உணர்வு குமுறல்களால் உண்மையை நாம் என்றும் அறிந்து கொண்டுவிடாமலே செய்துவிட்டார்கள்.. நாமும் வாய் பிளந்து செம்மறி ஆட்டு கூட்டமாக சிந்திக்கவே தோன்றாமல் உண்டு, உடுத்தி, வாழ்ந்து செத்து மடிகிறோம்.. வாழ்க ஜனநாயகம்..

No comments:

Post a Comment