Thursday 28 July 2016

Old man at the bridge.

ஆங்கில மூலக் கதை: எர்னஸ்ட் ஹெமிங்வே Old man at the bridge.


பாலத்தில் ஒரு கிழவன் - தமிழாக்கம்: எம்.நரேந்திரன்


போரின் காரணமாக அனைத்து சொத்துகளையும் தங்கள் சொந்த மண்ணில் விட்டுவிட்டு வெளியேறும் சாமானியர்களின் சோகத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது. பெரும் செல்வந்தர்கள் கூட நாடோடி போல தங்கள் கைகளில் எடுத்து செல்ல முடிவதை எடுத்துகொண்டு மிச்சத்தை ஊரிலேயே விட்டு செல்லவேண்டிய நிர்பந்தத்தை போர்கள் ஏற்படுத்துவது பற்றிய உணர்வு வலி மிகுந்தது.

எழுபத்திஆறு வயது முதியவர் ஒருவர் தொங்கு பாலத்தை ஒட்டிய சாலையோரத்தில் தூசி படிந்த ஆடைகளோடு அமர்ந்திருக்கிறார். பாலத்தின் முடிவு வரை சென்று எதிரிகள் எவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறார்கள் என்று பார்த்து வர செல்லும் ஒரு அதிகாரி மேடான சாலையை கடக்க, கோவேறு கழுதைகளுடன் திணறும் மக்களையும்,  அவர்களுக்கு உதவும் இராணுவ வீரர்களை பார்த்தபடி அந்த கிழவரையும் கடந்து பாலத்தின் மறு முனை சென்று பார்த்து வருகிறார்.

அனைவரும் அடி மேல் அடி எடுத்து நகர்ந்து செல்ல கிழவர் மட்டும் உட்கார்ந்த இடத்தில் இருந்து அசையாமல் தூரத்தில் வெறித்து பார்த்தபடி இருக்கிறார். அவரை நெருங்கும் அதிகாரி எங்கிருந்து வருகிறாய் என்கிறார். கிழவர் சான் கார்லோஸில் இருந்து வருவதாக கூறி புன்னகைக்கிறார்.  பின் என்னிடம் இரண்டு ஆடுகள், ஒரு பூனை மற்றும் நான்கு ஜோடி புறாக்கள் இருந்தன அவற்றை பராமரித்து அதனுடன் இருந்து வந்தேன். ஆனால் அவைகளை விட்டுவிட்டு என் நகரத்தை விட்டு வந்துவிட்டேன் . என் நகரத்தில் இருந்து வெளியேறிய கடைசி ஆள் நான் தான் என்கிறார்.

அவைகளை அங்கேயேவா விட்டு வந்தாய். ஏன் என்கிறார்.

அதிகாரிகளால் அப்படி நிர்பந்திக்கப்பட்டேன் என்கிறார்.

பின் அதிகாரி , உனக்கு குடும்பம் ஏதும் இல்லையா என கேட்க, கிழவர் தான் வளர்த்த விலங்குகள் மட்டும் தான் என்கிறார். பூனைக்கு ஒன்றும் நேராது ஆனால் மற்றவை தான் என்று பெருமூச்சுவிடுகிறார்.

அதிகாரி எத்தகைய அரசியல் சார்புடையவன் என கேட்க எந்த அரசியல் கோட்பாட்டையும் சேராதவன் நான் என்கிறார். ஆனால் பனிரெண்டு கிலோமீட்டர் நடந்து வந்திருப்பதை சொல்கிறார். இனி நடக்க முடியாது என்கிறார்.

இந்த ஒரு வரியில் கதையில் மொத்த உணர்வும் சொல்லப்பட்டுவிடுவதாக தான் உணர்கிறேன். எந்த அரசியல் கோட்பாடும் இல்லாதவர்கள் கூட அரசியல் கோட்பாடுகள் காரணமாக யாரோ சண்டையிட, அதில் சம்மந்தமே இல்லாதவர்கள் தங்கள் அமைதியை, நிம்மதியை இழந்து அநாதையாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதை சொல்வதாக தான் ஆசிரியர் உணர்த்துகிறார்.

அதிகாரி நின்று நிதானிக்க இது இடமில்லை , முடிந்தால் வாகனங்கள் நிற்கும் இடத்திற்கு செல்லுங்கள் என்கிறார்.

இன்னும் சிறிது நேரம் இங்கே இருந்துவிட்டு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வண்டிகளெல்லாம் எங்கே போகின்றன என கேட்கிறார்.

பார்சிலோனா என்கிறார் அதிகாரி. அங்கே எனக்கு யாரையும் தெரியாது இருந்தாலும் நன்றி என அதிகாரியிடம் கூறுகிறார். // இந்த வரிகள் சுமந்திருக்கும் வலி நுட்பமானதும் கொடுமையானதும் கூட.

போரினால் யாரும் எதுவும் தெரியாத ஊருக்கு அகதிகளாக குடிபெயரும் வலியை கிழவர் மூலம் ஒட்டுமொத்தமாக வார்த்தைகளே இல்லாமல் உணர வைத்துவிடுகிறார். 

மீண்டும் வெறித்த பார்வையுடன் தான் விட்டு வந்த விலங்குகளுக்காக கவலைப்படுகிறார்.  அதிகாரி எழுந்து கிளம்ப சொல்கிறான். எழுந்து கிளம்ப முயற்சிக்க முடியாமல் கிழவர் கீழே உட்காருகிறார். மெல்ல விலங்குகளை பற்றி முணுமுணுக்கிறார்.

அந்த கிழவருக்காக செய்ய ஒன்றுமில்லை என்பதாக கதை முடிகிறது.

கதை முடியும்போது அந்த அப்பாவி கிழவனின்  உணர்வுக்குள் ஆசிரியர் நம்மை கடத்தியிருப்பார்.



2 comments:

  1. இது சிறு கதையா? இல்லை சுருக்கமான விமர்சனமா?
    கதை வலிகள் மிகந்தது.

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம்

    ReplyDelete