Tuesday 30 July 2013

கிறுக்கல்கள்

மிரளும் மான்கள் அறிவதுமில்லை 
அவற்றிற்கு தெரிவதுமில்லை 
அதன் அழகும் கம்பீரமும் 
புலிகளின் வேட்கைக்கு 
எப்போதும் இரை தான் என்று .......
-------------------------

மலர் என்றாய் 
மான் என்றாய் 
மயில் என்றாய் 
குயில் என்றாய் 
தென்றல் என்றாய் 
நிலவு என்றாய் 
மழை என்றாய் 
கோவம் வரும்போது 
பேய் என்றாய் 
புயல் என்றாய் 
இன்னும் என்னேலோமா 
சொன்னாய் 
எல்லாம் சரி 
எப்போது நீயும் 
என்னை போல சக மனித உயிர் என்பாய் 
-----------------

சலசலவென்று வாய் மூடாமல் 
பேசும் என்னை 
குறுகுறுவென பார்க்கும்  ஒரு 
பார்வையால் மௌனிக்க வைக்க 
உன்னால் மட்டும் தான் முடியும்....
  -----------------.
---------------------------------

கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பில்
மழலையின் மொழியில் 
தத்தி தவழும் தளிர் நடையில் 
பள்ளி பேருந்தில் கையசைத்து 
செல்லும் முகமறியா
குட்டி குழந்தைகளின் குதுகலத்தில்
தந்தை, தாயின் கை பிடித்து செல்லும்
குழந்தையின் பூரிப்பில்
பள்ளி செல்லும் விடலைகளின் 
கவலை அறியா துள்ளலில் 
கல்லூரி செல்லும் இளைஞர்களின்
நம்பிக்கை முகங்களில் 
உலகை மறந்து தாங்களே உலகென நினைத்து 
சாலை ஓரங்களிலும், பேருந்து நிறுத்ததிலும் 
பேசும் இளம் காதலர்களின் சந்தோஷத்தில் 
வேலைக்கு செல்லும் ஆண், பெண் 
முகங்களின் பரபரப்பில் 

இயற்கையின் எழிலில் 
மலரின் அழகில் 
கவிதையின் வரியில்
இசையின் லயத்தில் 
தனிமையின் அமைதியில் 
எங்கும் நிறைந்திருக்கும்
பிரபஞ்சத்தின் வெளியில் 
என எல்லா இடங்களிலும் 
தேடுகின்றேன்...........
எங்கோ என்னை அறியாமல் 
தொலைந்து போன என் முகத்தை 
மீட்டு எடுத்து.........
மீண்டும் தொலைந்து போக .........

---------------------------

No comments:

Post a Comment