Saturday 20 July 2013

அம்மா

நான் என் அம்மாவை பற்றி யோசிததேன்..என் அப்பா அளவு என் அம்மாவை நான் இன்று வரை நேசித்ததில்லை..ஏனென்று யோசித்தேன்..

என் அம்மா பார்த்து பாரத்து சிறு வயதில் செய்தது கிடையாது..அப்பாவே தான் எல்லாம் செய்வார்கள.. வீட்டில் வேறு நிறைய பேர் இருந்ததால் அதிகம் அம்மாவிடம் ஓட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது..வீட்டில் முதல் குழந்தை அதுவும் தந்தையின் செல்ல பெண் என்பதால் மாமா, பாட்டி என்று எல்லாரும் என்னையே தாங்க இதனால் என் தங்கை, தம்பி இருவருக்கும் எல்லாமே எனக்கு பின் தான்..அதனாலோ என்னவோ அம்மா என்னை விட என் தங்கை தம்பிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்..

தம்பியும், தங்கையும் அம்மா சொல்வதை கேட்க எனக்கு இருக்கும்செல்லத்தால் நான் அம்மா எது சொன்னாலும் எதிர்ப்பேன்..அவர் வீட்டு வேலையில் உதவ சொன்னால் முடியாது என்று சொல்வேன்..அவர் அதிகம் படிப்பறிவில்லாதவர் அதனால் என்னை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்த்த போது பெண் பிள்ளைக்கு எதுக்கு காசு செலவு பண்ணி இந்த படிப்பெல்லாம் என்று எப்போதும் சொல்லி கொண்டே இருப்பார்....

அதன் பின்னும் அப்பா அவர் நண்பர்களுடன் அரசியல் ,இலக்கியம் பேச நான் அங்கு போய் உட்கார்ந்துவிடுவேன்.. கிட்டத்தட்ட ஆண் பிள்ளை போல சைக்கிள், பைக் ஓட்ட, விளையாட என்று எல்லாம்பழக்க நான் அம்மாவிடம் இருந்து ரொம்ப விலகி போனேன்.. இதெல்லாம் என் தாய்க்கு அறவே பிடிக்காது..

வயது வந்த பருவம் வந்த பின் ஏகப்பட்ட கெடுபிடிகள் என் அம்மா போட எனக்கும் அம்மாவுக்கும் பயங்கர சண்டை நடக்கும்...நாளை இன்னொருவர் வீட்டிற்கு போக போகிறவள் இவள் செய்வது எதுவும் சரியில்லை என்ற ரீதியில் தான் அம்மா ஆரம்பிப்பார்கள்...ஒரு முறை இப்படியே செல்லம் குடுங்க நாளை எவனையாவது காதலிச்சுட்டு அவனை தான் கட்டிக்க போறேன்னு நிக்க போறா என்று என் அம்மா சொல்ல நான் அந்த வார்த்தையின் அர்த்தம் கூட தெரியாமல் ஆமாம் அப்படி தான் செய்வேன் என்று சொன்னேன்..

அன்றிலிருந்து அம்மாவை பயம் பிடித்து கொண்டுள்ளது..என் தந்தை உடல் நிலை சரியில்லாமல் இருந்த காலகட்டத்தில் உறவினர்களுடன் பேசி என் தந்தை மனதை மாற்றி திருமண ஏற்பாடுகள் செய்துவிட்டார்...சில வருடங்கள் வரை அம்மா மேல் பயங்கர கோவம் இருந்தது...திருமணம் ஆன பின் என் வீட்டிற்கு வரவே மாட்டார்கள்.. ஏனென்றால் நான் என் அம்மாவை வார்த்தையால் வீருவேன்....

என் பிரசவத்தின் போது மற்ற ஆஸ்பத்திர் வாசத்திற்கும் , சித்தி, பெரிம்மா தான் உடன் இருப்பார்கள் நான் அம்மாவை பக்கத்திலேயே விடமாட்டேன்.. குழந்தை பிறந்த போது கூட...ஒரு சில வருடம் முன் ஏதோ ஒரு பேச்சின் போது என் பொண்ணு வேலைக்கு எல்லாம் போய் கஷ்டப்படுது என்று சொல்ல படிக்கணும் நிறைய சாதிக்கணும் அப்படின்னு இருந்த என் வாழ்க்கையை தான் ஒண்ணும் இல்லாம ஆக்கிட்ட இல்ல இப்ப எதுக்கு ரொம்ப சீன போடுற என்று கத்திவிட்டேன்..என் அம்மா நாளைக்கு உன் பிள்ளைக்கு கல்யாணம் பன்ன்றபோ கூட என் வாழ்க்கையை கெடுத்துட்னு சொல்லு என்று குரல் கம்ம...நான் ஒன்றும் சொல்லாமல் நகர்ந்துவிட்டேன்...

ஆரம்பத்தில் அம்மா வீட்டில் இருந்து எல்லாம் வரும் ஆனால் அம்மா என் வீடு வரமாட்டார்கள்... அப்பா மூலம் செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படும்... என் குணம் தெரியும் ஆதலால் தந்தையும் வற்புறத்த மாட்டார்கள்...ஒரு விருந்தாளி மாதிரி தான் அம்மாக்கும் எனக்கும் உள்ள உறவு..

எனக்கு வயது ஆக ஆக இப்போது புரிகிறது.. படிப்பறிவில்லாத என் அம்மாவை நான் அதிகம் அந்த காலகட்டத்தில் கலவரப்படுத்தி இருக்கேன்...அம்மா அப்படி ஒன்றும் மன்னிக்க முடியாத துரோகம் செய்யவில்லை...இப்போது என்ன நான் பேசினாலும் என் அம்மாவால் என்னிடம் அவ்வளவு ஓட்ட முடியவில்லை...என் தங்கை வீட்டில் உரிமையோடு இருக்கும் அம்மா என் வீட்டில் ஒரு நாள் இரண்டு நாட்கள் இருந்தாலே அபூர்வம்....வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் ஏன் நடக்கிறது என்பதற்கும் சில பிரிவுகளுக்கும் காரணம் புரிபடுவதில்லை....ஆனால் நடந்து விடுகிறது.....

3 comments:

  1. Ammamma . initavathu manam vittu pesungal.. Inga sonnatha Amma kitta sollunga

    ReplyDelete
  2. ஒரு பருவத்தில் நமக்கு சரி என்று தோனும் விஷயத்தில் நாம் உறுதியாக இருப்போம் அது தவறு என்று நாம் உணரும் போது
    தான் தெரியும் ஒரு இடைவெளி...... உங்கள் வரிகளில் உள்ள உணர்வுகள் படிக்கிற எனக்கே புரியும் போது உங்கள் தாயாரும் புரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன் கவலை படாதீர்கள் தோழி

    ReplyDelete