Thursday 5 December 2013

ப்ரியம்

எல்லோரும் சூழ்ந்து இருக்க
தனித்த ஏகாந்தம் தேடும்
பிரிந்திருக்கும் வேளையில்
சந்திக்க மனம் துடிக்கும்..

பேச வேண்டிய வார்த்தைகள்
அலை அலையாய்
நெஞ்சுக்குள்ள் முட்டி மோதும்
சந்தித்து பேசிடும் போதோ 
எல்லாம் மறந்து தொலைக்கும் 

மூழ்கி கொண்டு இருக்கும்
எண்ண சூழலை விட்டு
விலகவும் முடிவதில்லை
விலக்கி வைக்கவும் முடிவதில்லை
பிரியத்தை போல பெரும்
கொடுமையில்லை............


****************
எல்லையில்லா அன்புக்கு கூட
எல்லைகள் உண்டு என்பது
சில பொழுதுகளில் புரிந்தாலும்
எல்லை கோடு எது என்பதை
வரையறுக்க முடியாததால்
உள்ளுக்குள் சுருங்கி
எல்லை தேடி தொலைந்து போகிறோம்

No comments:

Post a Comment