Tuesday 10 December 2013

விமர்சனம்

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நமக்கே பிடித்த படங்கள் என்று சில இருக்கும் அதில் எனக்கு பிடித்த ஒன்று "மௌன ராகம்".. அதில் என் தோழிகள் எல்லாரும் கார்த்திக்கின் கேரக்டரை பிடிக்கும் என்று சொல்ல நான் கார்த்திக் கேரக்டரை ரசித்தேன் ஆனால் பிடித்தது மோகன் என்று சொல்லுவேன்..

ரேவதியை ஆரம்பத்தில் விரும்புவதாக இருக்கட்டும் அவர் விரும்பவில்லை என்று தெரிந்து விலகி நிற்கும் போது அந்த ,மோகன் கேரக்டர் உயர்ந்து நிற்கும் மனதில்... அதன் பின் ரேவதி மனம் மாறி மோகனை நேசிக்கும் போது முள்ளாய் மோகன் வார்த்தைகாளால் (ரேவதி முதலில் சொன்னது தான்) குத்தும் போது மட்டும் பிடிக்கலை என்று சொல்லி கொண்டு இருந்தேன் என் கணவரிம்... அவர் நீங்க வாய் இருக்குன்னு என்ன வேண்டுமானாலும் சொல்லுவீங்க அப்புறம் மனசு மாறுவீங்க நீங்க சொன்னத எல்லாம் மறந்துடணும் என்ன நியாயம்...அது ஏன் பொண்ணுங்க எல்லாம் நடக்காத ஒண்ணுக்கே ஆசைபடறீங்க என்று கேட்க... நான் ஆமாம் அப்படி தான் என்று சொல்லி வந்துவிட்டேன்.....

ஒரு படத்துக்கு முப்பது வருடம் கழித்து விமர்சனம் எழுதியவள் நானாக தான் இருக்க முடியும்..

No comments:

Post a Comment