Sunday 22 December 2013

நாற்பதுகளில்

மனதின் குப்பைகளை
கழிவிரக்கங்களை
வன்மம், துரோகங்கள் என
வேண்டாத பாரத்தை
எல்லாம் சுமந்து
உள்ளுக்குள்
அகத்தில் பேயாட்டம் ஆடி
உதிரம் கண்ட பின்
எல்லாம் அடங்கி
மூளை(லை)யில் சுருண்டு
அணைத்து ஆறுதல்படுத்தும்
அன்புக்கு ஏங்கி
என ஒரு சூறாவாளியை
நாற்பதை தாண்டிய பெண்கள்
ஒவ்வொரு மாதமும் கடக்கின்றனர்..
இந்த சூறாவளிக்கு சிக்காமல்
தப்புபவர்கள் வெகு சிலரே...

No comments:

Post a Comment