Sunday 22 December 2013

ப்ரியம், பிரிவு

எல்லோரும் சூழ்ந்து இருக்க
தனித்த ஏகாந்தம் தேடும்
பிரிந்திருக்கும் வேளையில்
சந்திக்க மனம் துடிக்கும்..

பேச வேண்டிய வார்த்தைகள்
அலை அலையாய்
நெஞ்சுக்குள்ள் முட்டி மோதும்
சந்தித்து பேசிடும் போதோ
எல்லாம் மறந்து தொலைக்கும்

மூழ்கி கொண்டு இருக்கும்
எண்ண சூழலை விட்டு
விலகவும் முடிவதில்லை
விலக்கி வைக்கவும் முடிவதில்லை
பிரியத்தை போல பெரும்
கொடுமையில்லை...
***********
சாகும் வரை கைவிடமாட்டேன்
என்று கைபிடித்து
சொன்ன ஒற்றை வார்த்தை
சாகா வரம் பெற்று
நெஞ்சுக்குள் மீண்டும் மீண்டும்
முட்டி மோதுகிறது
ஒவ்வொரு சண்டைக்கும் பின்பான
உன் விலகல்களின் போது..
 
 
 
 

No comments:

Post a Comment