Thursday 12 December 2013

காதல்

நடந்தால் 
அமர்ந்தால் 
கிடந்தால் 
விடிந்தால்..
உன்னை நினைத்து 

சிரித்து, சிரித்து ...
பேசி பேசி ...
அணைப்பில் சிலிர்த்து
மனதில் குழைந்து
ரகசியம் இல்லையென்று
மனதுக்குள் மாய்ந்து

கண்மூடி கனவுகள் கண்டு
கண் திறந்திருக்கும் போதும்
கற்பனையில் வாழ்ந்து
எல்லாம் நீ என ஆன பின்
சலிப்பு வந்தது ஏனோ???

நம்மை மறந்து மாய்ந்து 
இருந்தது காதலா?
இல்லை இந்த சலிப்பு தான் காதலா?
விடை தெரியா கேள்விகளில்
காதலும் ஒன்று...............

**********


சலசலவென்று வாய் மூடாமல் 
பேசும் என்னை 
குறுகுறுவென பார்க்கும் ஒரு 
பார்வையால் மௌனிக்க வைக்க 
உன்னால் மட்டுமே முடியும்....
********

No comments:

Post a Comment