Tuesday 10 December 2013

தேடல்


இம்முறை கும்பகோணம் சென்ற போது என் பால்ய வயது நண்பனை சந்தித்து அளவளாவ சிறிது நேரம் கிடைத்தது.மூன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம்...எங்கள் வீட்டு மாடி பகுதியில் குடியிருந்தவர்கள்....சிறு வயது நிகழ்வுகளை நினைவு கூர்ந்தோம்.மகாமகம் தெப்ப குளத்தில் என் தம்பி குழந்தைகளுடன் தெப்பம் பார்த்த போது மனம் ரொம்ப லேசாக இருந்தது...

என் நண்பன் எப்படி இருக்கிறது வாழ்க்கை என்றான்... நல்லா போய்கிட்டு இருக்கு.. நீ ஏன் சென்னை பக்கம் வரவில்லை. ட்ரைனிங் முடிச்சதோட சரி.. அப்புறம் இங்கயே செட்டில் ஆயிட்டியே ஏன்னு கேட்டேன்? கமலி காலைல எழுந்து பஸ் புடிக்க ஒட வேணாம், பொறுமையா எழுந்து நிதானமா 9 - 10 மணிக்கு கடைக்கு போனா போதும், மதியம் வீட்டில வந்து சாப்ட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாயங்காலம் திருப்பி காபி குடிச்சுட்டு கோயில ஒரு சுத்து சுத்திட்டு திருப்பி கடைக்கு போய்ட்டு ராத்திரி வீட்டுக்கு வரேன்.. ரொம்ப சம்பாரிக்கல, கும்பகோணத்துலயே வீடு கட்டிட்டேன், தங்கைகு கல்யாணம் பண்ணிட்டேன், பையன மெட்ரிகுலெஷன்ல படிக்க வைக்கிறேன், பெரிய பரபரப்பு இல்ல.. எனக்கு இது புடிச்சிருக்கு,,,

எங்கப்பா வற்புருத்தல நான் சென்னை வந்திருந்தா இவ்ளோ நிம்மதியா இருந்திருப்பேனா தெரியல கமலி.. ஆரம்பத்துல என் அப்பாக்கு பயங்கர வருத்தம்,.. ஆனா நான் இங்கயே இருக்கனும்னு முடிவு பண்ணினது சென்னைக்கு ட்ரெயினிங் வந்தப்போ தான்.. சொந்தகாரவங்க, ஃப்ரண்ட்ஸ், எல்லாம் நின்னு பேச கூட நேரம் இல்லாம ஒடறத பார்த்து தான் நான் இந்த முடிவுக்கு வந்தென்.. உண்மைய சொல்லு, நீ என்ன இந்த நாட்கள்ல எத்தனை நாள் நினைச்சு பார்த்திருப்ப அப்படின்னு கேட்டான்.. என்னால் பதில் சொல்ல முடியல.. நீ என் மனைவியிடம் கேள் அப்படின்னான்.. அவன் மனைவி கண்டிப்பா ஒரு நாளுக்கு ஒரு வாட்டியாச்சும் உங்க பேர சொல்லாம இருக்க மாட்டாங்க என்று சொன்ன போது வருத்தபட்டேன்.. அவன் நீ சங்கடபடாத உனக்கு அந்த பரபரப்பு வாழ்க்கை புடிச்சிருக்கு, அந்த பரபரப்புக்கு விலை, ஃப்ரண்ட்ஸ் மட்டும் இல்ல, சொந்தம் பந்தங்களும் தான், நான் இந்த வாழ்க்கையில் கிடைத்த எதையும் இழக்க தயாரில்லை.. எனக்கு இது போதும் என்று சொன்ன பொது நான் வாழ்க்கையில் மனிதர்களிடம் இருப்பதை விட்டு எதை புத்தகங்களில் தேடுகிறேன் என்று சிறிது நேரம் நினைத்தேன்…..

No comments:

Post a Comment