Tuesday 10 December 2013

மனிதர்கள்

பரதேசி படம் பார்த்து கொத்தடிமை வாழ்க்கை முறை பற்றி நிறைய பரிதாப்படுகிறோம்..ஆனால் அதற்கு நிகரான உழைப்பு சுரண்டல் நம்மை சுற்றி நடந்து கொண்டு தான் இருக்கிறது...கையாலாகத்தனத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டு தான் கடந்து செல்கிறோம்...

நான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தது என் கணவருக்கு வேண்டியவரின் கம்பெனியில்..அது ஆடைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம்...ஒரு டிபார்மெண்ட் இன்சார்ஜ்ஜாக எனக்கு வேலை எனக்கு கீழ் இரண்டு பெண் பிள்ளைகள் வோர்கர்ஸ்ஸாக.. நான் வீட்டிலிருந்து அப்போது தான் பிராக்டிக்கலாக வெளி உலகம் வருகிறேன்...என் கணவர் மேல் பயமும் MD க்கு அவர் நெருக்கமானவர் என்பதாலும் என்னிடம் அனைவருமே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்தனர்..

எனக்கு கீழ் இருந்த இரண்டு பெண்களிடமும் பேச்சு கொடுக்க அவர்களில் ஒருவர் பி,எஸ் .சி பயோ கெமிஸ்ட்ரி முடித்திருந்தார் இன்னொருவர் டிப்ளோமா முடித்திருந்தார்...நீங்கள் இருவரும் படித்துவிட்டு ஏன் ஹெல்பராக வேலை செய்கிறீர்கள் இங்கு என்று கேட்டேன்..அதில் ஒருவர் பஸ் வசதி இல்லாத கிராமம் அந்த பெண் B.Sc., படித்திருந்தாலும் விவரம் தெரியாமல் பார்க்க வேறு சுமாராக இருந்தாள் அந்த பெண் காலை 4 - 5 மணிக்கே எழுந்துவிடுவாளாம் கம்பெனி பஸ் 6 மணிக்கு வரும் அதில் வந்துவிடுவேன் காலை மதியம் இரண்டு வேலையும் கம்பெனில டிபன் சாப்ப்பாடு, மாலை டீ பிஸ்கட் கொடுத்துடுவாங்க..வீட்டுக்கு போக 9 -10 ஆயிடும் ..500/- ரூபாய் என்பது என் குடும்பத்துக்கு பெரிய வருமானம் என்று சொல்ல நீ நான் படித்து இருக்கிறேன் எனக்கு வேறு வேலை கொடுங்க அப்படின்னு கேக்கலாமே என்று சொல்ல அதெல்லாம் அழகா இருந்தா தான்க்கா ஸ்டாப் இல்லைன்னா வோர்கர் தான் என்று சொல்ல...அதன் பின் நான் அந்த பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வேலை இல்லாத நேரத்தில் கம்யூட்டர் பற்றி அடிப்படை சொல்லி கொடுத்தேன்...இது போல அந்த கம்பெனியில் பல இடங்களில் நிறைய விஷயங்கள் என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்னால் என் கணவருக்கும் தர்ம சங்கடம்...என்னால் முடிந்தது அந்த இரண்டு பெண்களுக்கும் ஏதாவது ஒரு வழி செய்துவிட்டு கிளம்ப வேண்டும் என்று HR டிபார்ட்மெண்ட்ல பேசி இருவரையும் வேறு ப்ராஞ்ச்க்கு ஸ்டாப்பா ப்ரொமொட் செய்து அனுப்பிவிட்டு நானும் ரிசைன் செய்துவிட்டு வந்து விட்டேன்...

எனக்கு தெரிந்து நிறைய ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் கிட்டத்தட்ட கொத்தடிமை மாதிரி தான் பெண்கள் நிலை...கிராமங்களில் இருந்து பெண்களை இலவச பஸ், சாப்பாடு என்று கூட்டி வந்து காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை உழைப்பை சுரண்டி எடுக்கிறார்கள்...இங்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட், அவருக்கு கமிஷன் எல்லாம் உண்டு....அதை விட அந்த பெண்களிடம் இருந்தும் ஒரு தொகை வேலைக்கு சேர்த்துவிட வாங்கி கொள்கிறார்கள்.... . மேற்பார்வையாளர்கள் 10,,000 மேல் சம்பளம் பெற இவர்கள் வெறும் 500க்கும் ஆயிரத்துக்கும் மாடு மாதிரி உழைக்கிறார்கள்..............

No comments:

Post a Comment