Wednesday 18 December 2013

பெண் சுதந்திரம்

பெண் சுதந்திரம்:

அன்று:

அடுக்களை தாண்டி வெளியே வராதே
பெண்ணக்கு படிப்பு எதற்கு?
சமைக்க கற்று கொள்
அனைவரயும் அனுசரிக்க கற்று கொள்
யாரயும் நிமிர்ந்து நோக்காதே
ஆணுக்கு தேவை அதுவே......

அதற்கு பின்:

கல்லூரிக்கு செல், பட்டம் பெறு
பட்டம் பெற்ற பெண் தான்
கல்யாணச் சந்தையில் விலை போவாள்
குழந்தைக்கு வீட்டுப்பாடம் முதல்
வங்கி பரிமாற்றம் வரை
அடுக்களை முதல் அனைத்தும்
படித்தவள் திறம் பட நிர்வகிக்க முடியும்.........

இன்று:

பட்டம் பெறு, ஆணுக்கு நிகராய் வேலைக்கு போ
ஊதியத்தை அப்பாவிடமோ, அண்ணாவிடமோ
சமர்த்தாக சேர்த்து விடு....
நண்பர்கள் எல்லாம் அளவோடு நிருத்திகொள்
இல்லையென்றால் திருமணத்தில் பிரச்சனை வரும்...
திருமணத்திற்கு பின்
ஊதிய கணக்கை கணவனிடம் சேர்த்து விடு....
அழகு நிலையம் செல்வது முதல்
நண்பர்கள் வரை அனைத்திற்கும்
அனுமதியும் சுதந்திரமும் உண்டு
கணவனின் மேற்பார்வையில்...
ஆனால்.........
கணவனுக்கு இஷ்டம் இல்லை என்றால்
அனைத்தயும் விட்டு விட வேண்டும்.........

பெரும்பாலும் பெண்ணின் நிலை இப்படி இருக்க
ஊடகங்கள் முதல், பத்திரிக்கைகள் வரை
உடை முதல் பேச்சு வரை அனைத்திலும்
பெண் சுதந்திரம் முன்பை விட
அதிகமாக இருப்பதாக பெருமையுடன்
பீற்றிக்கொள்கிறோம்....

No comments:

Post a Comment