Tuesday 10 December 2013

குழந்தை உலகம்

குழந்தைகளின் உலகம் எவ்வளவு ரம்மியமானது...அதுவும் விவரம் புரியாமல் அந்த பருவத்தில் அவற்றின் பயங்களும், கேள்விகளும் நமக்கு எத்தனை வயதானாலும் மறப்பதில்லை..அதை அவர்கள் வளர்ந்தவுடன் சொல்லி கலாய்ப்பது இருக்கே.......

என் சிறிய மகன் சிறு வயதில் நொறுக்கு தீனி சாப்பிட்டு கொண்டே இருப்பான்..அப்போது அவன் எல்.கே.ஜி. படித்துகொண்டு இருந்தான்....நாங்கள் அவனின் இந்த இடைவிடாத கொறிக்கும் பழக்கத்தை கிண்டல் செய்வோம்...என் தங்கை ஒரு நாள் நல்ல வேளை பெண்ணாக பிறக்கவில்லை பிறந்து வளர்ந்தால் நாளை பிள்ளை பெக்க்ரப்போ வயிற்றையும் , வாயையும் கட்றது பெரிய கஷ்டமா இல்ல இருக்கும் என்று சொல்லி சிரிக்க...நாங்கள் அதன் பின் வேலை என்று பிஸி ஆகிவிட்டோம்..

அதன் பின் இரவு என் பையனுக்கு எப்போதும் கதை சொல்ல வேண்டும் இல்லை அவன் கதை சொல்வதை கேட்க வேண்டும் அன்று படுத்தவுடன் எப்பமா குழந்தை பிறக்கும் என்று கேட்டான்...நானும் அது பெரியவர்களா வளர்ந்த பின் என்று சொல்ல அப்ப நானும் பெரியவனான பின் எனக்கும் குழந்தை பிறக்குமா என்று கேட்க ஆமாம் டா இப்ப உனக்கு புரியாது நீ வளர்ந்த பின் சொல்கிறேன் என்று சொல்ல அவன் அழ ஆரம்பித்துவிட்டான்....என்னடா என்னடா என்று கேட்க சித்தி சொன்னுச்சே குழந்தை பிறந்தா 3 நாள் ஹாஸ்பிட்டலில் இருக்கனுமாம் ...சாப்பிட எதுவும் கொடுக்க மாட்டார்களாம் ...அப்ப எனக்கும் 3 நாள் சாப்பிட கொடுக்க மாட்டாங்களா என்று அழ........... எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை அவனை நிறைய சொல்லி சமாதானம் செய்தோம் ...பெண் பிள்ளைக்கு தான் பிறக்கும் உனக்கு ஒன்றும் இல்லை அப்படி இப்படின்னு அதை இன்று வரை சொல்லி அவனை கலாய்த்து கொண்டு இருக்கிறோம்.............உண்ணாவிரதம் இருக்க சொன்ன உன்னை தாண்டா முதலில் அனுப்பனும் என்று....

No comments:

Post a Comment