Thursday 5 December 2013

அகலிகை

ராமனின் பாதம்பட்டு கல்லாய் இருந்து
உயிர்பெற்ற அகலிகை போல
மர(றி)த்து போன பெண்மையும்
உயிர்பெற்றுவிட எத்தனிக்கும்..

பேசப்படும் வார்த்தைகளில்
அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளில்
காட்டப்படும் அக்கறையில்
பொழியப்படும் அன்பில்
பிரகாசிக்கும் அறிவில் ஈர்க்கப்பட்டு...

அக்கறை, அன்பு, எல்லாவற்றிற்கும்
காரணம் புலப்படும் போது
கல்லாகவே இருக்க செய்யும்
சாபம் தேடி நிறைய அகலிகைகள்..

No comments:

Post a Comment