Tuesday 10 December 2013

அட்வைஸ்

ஒரு நண்பர் என்னிடம் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் திருமணமும் செய்து கொள்ள போகிறேன் விரைவில் அந்த பெண்ணை காலம் முழுதும் சந்தோசமா வைச்சுக்கணும் நான் என்ன செய்யனும் என்றார்...

சும்மாவே நான் நாலு மணி நேரம் பேசுவேன் அவர் வேற என்ன மதிச்சு கேட்டாரா நானும் எனக்கு தெரிஞ்சது புரிஞ்சது எல்லாம் சொன்னேன்...

அவங்களுக்கு என்னலாம் பிடிக்கும்னு கேட்டு அத அவங்க எதிர்ப்பார்க்காத நேரத்துல செஞ்சு அசத்தனும்...அவங்க என்ன சொன்னாலும் சரி சரி ன்னு தலையாட்டனும்.. கரெக்ட்டா அவங்க வர சொல்ற நேரத்துக்கு வர சொல்ற இடத்துக்கு வந்துடனும்...அவங்களுக்கு நொறுக்ஸ் பிடிக்கும்னா கேட்காமலே வாங்கி கொடுக்கணும்,. இதெல்லாம் கல்யாணத்திற்கு முன்..

கல்யாணத்திற்கு பின் காலை அவர்கள் தான் முதலில் எழுந்து காபி கொடுக்கணும்னு எதிர்ப்பார்க்ககூடாது நீங்கள் எழுந்து காபி போட்டு கொடுத்து அசத்தனும்...எல்லா வேலையும் செய்யனும் நான் இத தான் செய்வேன் அத செய்ய மாட்டேன் அப்படி எல்லாம் சொல்ல கூடாது...கல்யாணத்துக்கு அப்புறம் கல்யாணம் தான் ஆயிடுச்சே இவளுக்கு நாமே ஒரு பரிசு அதன் பின் எதற்கு பரிசு என்று சினிமா தனமா பேசி கஞ்சத்தனம் பார்த்து அவ பிறந்த நாளுக்கு கூட ஒண்ணும் வாங்கி தராம இருக்க கூடாது...முதலில் எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்கணும்

எல்லாவற்றையும் விட அவங்கள சுதந்திரமா இருக்க விடனும்.. என்று சொல்ல...

நான் ஒண்ணே ஒண்ணு கேக்கலாமா என்றார், நானும் தாரளமாக என்றேன்...

பெண்கள் கல்யாணத்திற்கு ஆள் தேடறீங்களா இல்லை கொத்தடிமை தேடறீங்களா? என்று கேட்க நான் பயங்கர டென்ஷன் ஆயிட்டேன்
யாரை பார்த்து என்ன கேக்றீங்க என்று சத்தமாக கேட்டு நாங்கள் அடிமைகளை தேடுவதில்லை அடிமை மாதிரி உள்ளவங்கள தான் தேடுறோம்....அந்த வித்தியாசம் கூட தெரியாம நீங்க காதல், கல்யாணம் எல்லாம் ஆசைபட்டா என்று சொல்ல

அவர் ஐயோ சாமி ஆள விடுங்க எனக்கு காதல், கல்யாணம் எதுவும் வேண்டாம் நான் வடக்க இமயமலை தாண்டி எங்கனயாச்சும் ஓடி போறேன்....ஒண்ணு மட்டும் நிச்சயம் நான் கல்யாணம் பண்ண மாட்டேன் அப்படியே பண்ணினாலும் உங்க மாதிரி ஆளுங்க பார்வையில என் பொண்டாட்டியை காண்பிக்கவே மாட்டேன் அப்படின்னு ஓடிட்டார்.....இனி யாரும் அட்வைஸ் கேப்பீங்க....

No comments:

Post a Comment