Thursday 12 December 2013

ஊர் பழக்கம்

ஏரியா விட்டு ஏரியா மாறினாலே சில பழக்கவழக்கங்கள் கொஞ்சம் அதிர்ச்சியை தான் ஆரம்பத்தில் கொடுக்கிறது...

அதில் ஒன்று வா, போ என்று கூப்பிடுவது..சென்னையில் பெரியவர் சிறியவர் அனைவரையும் சர்வ சாதாரணமாக வா போ என்று கூப்பிடுவது முதலில் அதிர்ச்சியாய் இருந்தது...அப்புறம் பழகிக்கொண்டேன்...

அதற்கடுத்து அதிர்ச்சி திருமண வீட்டில் நடந்தது...எங்கள் பக்கம் திருமணத்திற்கு வந்தவர்களை சாப்பிட வாங்க வாங்க என்று கூப்பிட்டு பந்தி நடக்கும் இடம் வரை அழைத்து சென்று சாப்பிட சொல்லுவோம்...அது போல அவர்கள் விடை பெறும் போது சாப்ட்டீங்களா என்று கேட்க்காமல் இருக்க மாட்டோம்..

எங்கள் வீட்டில் திருமண வேலை உதவிக்காக வரும் அக்கம் பக்கத்தினர் கூட சாப்பிடும் நேரம் அவர்கள் வீட்டில் சென்று அழைத்தால் தான் சாப்பிடுவார்கள்...இல்லை என்றால் உதவி செய்துவிட்டு சரியாக அந்த நேரம் வரும்போது  நழுவி விடுவார்கள்....

ஆனால் சென்னையில் உறவினர்கள் அல்லாது முதல் முறையாக நண்பர்கள் திருமணம் செல்ல  பந்திக்கு கியூவில் நிற்பதை பார்த்து செம ஷாக்....என்னங்க இது என்று கேட்க என் கணவர் இங்கு எல்லாம் அப்படி தான் என்று சொல்ல எனக்கு சாப்பாடே வேண்டாம் வெளியில் சாப்பிட்டுக்கலாம் என்று திருமணத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன்...அதன் பின் ரொம்ப யோசித்து தான் திருமண வீடுகளுக்கு செல்வேன்... தற்போது அலுவலக நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து போவதால் அரட்டை அது இதுவென்று அவ்வளவாக தெரியவில்லை... தனியாக பெரும்பாலும் செல்வதில்லை.....ஆனாலும் இன்னும் சென்னையில் திருமண வீடுகளில் சாப்பிட தயக்கம் இருக்கவே செய்கிறது....

No comments:

Post a Comment