Wednesday 11 December 2013

ஊடல்

கையுடன் கை கோர்த்து கொள்ள 
மனம் துடித்தாலும் 
விரல்கள் விலகி வெட்கம் காக்கும் ....

நெஞ்சுக்குள் சொல்ல ஆயிரம் 
இருந்தாலும் வார்த்தையாய் 
சொல்ல சில அபத்தங்களே எஞ்சி நிற்கும் .....

உன்னில் கரைந்திட மனம் விழைந்தாலும் 
பொய் கோபம் கொண்டே 
பொழுதுகள் கரையும் ..

பனி போல படர்ந்திருக்கும் சோகம்
உன் சிறு அணைப்பில்
உருகிடும் என்பதை உணரும் நாளும் எந்நாளோ

No comments:

Post a Comment