Tuesday 10 December 2013

சுவராஸ்யமான மனிதர்கள்

நான் சந்தித்த சுவராஸ்யமான மனிதர்கள்:

நான் ஆரம்பத்தில் வேலை பார்த்த இடத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு அருமையான சூழலில் வேலை கிடைத்தது.... அவ்வளவு அருமையான மனிதர்கள் படிப்பில், பண்பில் உயர்ந்தவர்களுடன் பணி புரிய என்னுடைய அலுவலக நேரம் அவ்வளவு சந்தோசமாக மாறியது....

மதிய உணவு இடைவெளி நேரங்களில் எவ்வளவு விஷயங்கள் அலசப்படும்..கிண்டல் , கேலி, உலக படிப்பு, உலக சாப்பாடு .ஆன்மிகம், காதல், லோக்கல் ஆஸ்பிட்டலில் நடக்கும் நிகழ்வுகள், என்று நான் தினமும் புதிதாக ஒவ்வொன்று தெரிந்து கொள்வேன்....அதிலும் என்னுடன் பணி புரிந்த ராம்குமார் (தற்போது கத்தாரில் பணி புரிகிறார்) பேசுவது அவ்வளவு சுவராஸ்யமாக இருக்கும்...பெரும்பாலும் யாரையும் பேச விடாமல் அவரே முந்தி கொள்வார்...அவரின் பேச்சின் சுவராஸ்யம் காரணமாக நாங்கள் அவர் பேசுவதை கேட்கவே விரும்புவோம்...அவரது கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் நடந்தது என ஆரம்பித்து எங்கெங்கோ சென்று விடுவார், இடையில் சுபா நான் எங்க விட்டேன். (இவர் தற்போது ஆஸ்திரேலியாவில்) என்று கேட்க அவர் எடுத்து கொடுக்க இதற்க்கு தான் சுபா பக்கத்துல இருக்கணும் பாருங்க நீங்க எல்லாம் பேச்சு பராக்குல விட்டுட்டீங்க அவங்க கரெக்டா எடுத்து கொடுக்கிறாங்க என்று அவர்களையும் கலாய்ப்பார்.. எப்பவும் நான் தான் பேசணுமா நீங்க யாராச்சும் பேச கூடாதா என்று சொல்லி யாராவது பேச ஆரம்பித்தால் இவர் இப்படி தான் என்று தன் ரூட்டுக்கு பேச்சை கொண்டு சென்று விடுவார்... ..மிமிக்ரி எல்லாரையும் போல செய்வார்...சாப்பிடும் போது புரை ஏறும் அளவுக்கு எல்லாம் சிரித்து இருக்கிறோம்....

ஒரு முறை நான் சார் என்னை போல மிமிக்ரி பண்ணுங்க என்று சொல்ல...ஐயோ நீங்க பெரியவங்க எவ்ளோ பெரிய பிள்ளைகளுக்கு அம்மா உங்களை எல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்ல சார் சார் ப்ளீஸ் என்று சொல்ல அவர் என்னை மாதிரி வேகமாக நடந்து பேசி காண்பிக்க எல்லாரும் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது..நான் அவ்வளவு வேகமாக நடப்பேன் பேசுவேன் என்பதே எனக்கு அப்போது தான் புரிந்தது...பின் அவர்கள் வீட்டுக்கு நாங்கள் எங்கள் வீட்டுக்கு நண்பர்கள் என்று வர நட்பு அழகாக சென்றது....அதன் பின் முதலில் சுபா அவர்களுக்கு வேலை கிடைத்து ஆஸ்திரேலியா செல்ல, ராம் சார் கத்தார் செல்ல, கணேஷ் அவர்களும் ஆஸ்திரேலியா செல்ல அந்த சுவராஸ்யமும் அவர்களுடனே சென்று விட்டது...என் மகனுக்கு கிட்னி ஸ்டோன் வந்த போது நான் மிக கலக்குமுற்று இருந்தேன்...ராம் சார் கத்தாரில் இருந்த போதும் அவர் மனைவியிடம் அவர்கள் பையன் மேல் பயங்கர பிரியம் நீ போய் நேரில் பார்த்து தைரியம் சொல்லு என்று சொல்ல அவர்களும் (இப்போது கைனகாலாஜி மேற்படிப்பு படிக்கிறார்கள்) வந்து பார்த்து விஜயா ஹாஸ்பிட்டலில் ப்ரெண்ட் டாக்டர்கள் இருக்கிறார்கள் எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் இதெல்லாம் சாதாரணம் என்று கூறிய ஆறுதல் அந்த நேரத்தில் எனக்கு மிக பெரிய பலம்....

கத்தார் போய் சில மாதங்கள் கழித்து திரும்பி வந்த போது குரல் மாற்றி என் பெயரை சொல்லி அது நீங்க தானே நீங்க ---- அங்க தானே வேலை பார்கறீங்க நான் டிவில இருந்து பேசுறேன் என்று என்னை குழப்பி நான் அப்போது இரவு சாப்பாடு என் கணவருக்கு வைத்து கொண்டு இருந்தேன்...என் கணவர் ஹேய் ஏதாவது ராங் நம்பரா இருக்க போகுது பசிக்குது கட் பண்ணு என்று சொல்ல நான் இல்லைங்க என் பெயர், வேலை பார்க்கும் இடம் எல்லாம் சரியா சொல்லறாங்களே என்று குழம்ப என் கணவர் சரி போனை குடு உனக்கு நேத்து பேசினவங்களே நியாபகம் இருக்காது என்று வாங்க போக மேம் நான் ராம் பேசுறேன் என்று சொல்லி என்னை வழிய வைத்தது மறக்கவே முடியாது....

இப்போது முகநூலிலும்,போனிலும் என்று நட்பு தொடர்கிறது.....நம்மை சுற்றி நல்ல மனிதர்கள் நண்பர்களாக அமைந்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதை சில விஷயங்கள் அசை போடும் போது புரிகிறது... அவர்களுடன் சேர்ந்து பணி புரிந்த நாட்கள் நெஞ்சில் என்றும் பசுமையாக...........

No comments:

Post a Comment