Thursday 12 December 2013

ஆர்கெஸ்ட்ரா

டிவி எல்லாம் எல்லா வீடுகளையும் எட்டி பார்க்காத எண்பதுகளின் ஆரம்பம்..எங்கள் தெருவில் ஒருவரின் திருமணத்திற்கு முதன் முதலாக இசை கச்சேரி..அதுவரை கச்சேரி என்றால் நாதஸ்வரம, கர்னாடக இசை தான் இருக்கும்...ஆனால் முதன் முதலாக இவரின் திருமணத்தில் சினமா பாடல்கள் பாடும் ஆர்கெஸ்ட்ரா....தெருவை அடைத்து பந்தல்.. 

எங்கள் வீட்டில் இருந்து மூன்றாவது வீடு அவர்களுடையது..அப்போது எல்லாம் திருமண் மண்டபங்கள் இந்த அளவு பேசன் ஆகாத கால கட்டம்..வீடுகளில் தான் திருமணங்கள் நடக்கும் ..எங்கள் தெருக்களில் உள்ள வீடுகள் எல்லாம் பெரும்பாலும் சுற்று கட்டு வீடுகள்..வாசல் பக்கம் ஒரு தெருவிலும் கொல்லை பக்கம் அடுத்த தெருவிலும் முடியும்...எங்கள் வீட்டிற்கு சமீபத்தில் தான் மேடை... தெரு எல்லாம் சேர்கள் போட்டு ஏக தடபுடல்...நான் அந்த வயதில் வீட்டில் இருந்து பள்ளி தவிர வேறு எதற்கும் வீட்டு வாசற்படி தாண்ட தடை...

எனக்கு முதன் முதலாக இசை நிகழ்ச்சி நேரில் பார்க்க ஆசை நான் என் அம்மாவிடம் கேட்டால் முடியவே முடியாது என்று சாதித்துவிட்டர்கள்.. அதன் பின் கெஞ்சி கூத்தாடி திண்ணையை விட்டு கீழே கால் வைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து நாங்கள் ஒரு 6 - 7 ஒத்த வயது பெண்கள் எல்லாரும் சம்மதம் வாங்கி என் அம்மா எங்கள் வீட்டின் திண்ணை பக்கம் லைட் வைக்க கூடாது என்று தெருவில் லைட் போடுவோரிடம் சொல்லி ஒரு வழியாக எல்லாரும் இசை கச்சேரி கேக்க தயாரானோம்..அதற்கு நாங்கள் கெஞ்சிய கெஞ்சல் இருக்கே .....என்னவோ எங்களை தூக்கிட்டு ஓடிடுவாங்க அப்படின்ற மாதிரி எங்களுக்கு காவலுக்கு மத்திம வயது பெண்கள் திண்ணையின் ஓரத்தில்...

கச்சேரி ஆரம்பிக்கும் முன் சரியான மழை ..ச்சே என்று ஆகிவிட்டது..மழையை திட்டி கொண்டே இருந்தோம்..ஒரு வழியாக மழை நின்று மாலை ஐந்து மணிக்கு மேல் கச்சேரி ஆரம்பித்தது..இருட்டிய பின் தான் வீட்டு வாயிற்படியில் இருந்து திண்ணையில் உட்கார அனுமதி...முதலில் பக்தி பாடல் ஆரம்பித்து காதல் பரிசு படத்தில் இருந்து வரும் ஒரு பாடலுடன் ஆரம்பித்து அப்போதைய மோகன் ஹிட்ஸ் , சின்ன பூவே மெல்ல பேசு பாடல்கள் என மாற்றி மாற்றி பாட.. நாங்கள் திண்ணையில் சிலை போல உட்கார்ந்து இருந்தோம்...ஹப்பா என்ன ஒரு ஆனந்தம். என் வாழ்வில் அதன் பின் பல இசைக்கச்சேரிகள் கேட்டிருக்கிறேன்.. ஆனால் அந்த சந்தோசம் அதன் பின் இல்லை..இப்பொது எல்லாம் மைக்ரேன் தலை வலியால் சின்ன ஹாலில் வைக்கும் ஹை டெசிபல் சவுண்டு எபெக்ட்ல ஐயோ எப்போ வெளில போவோம் என்று ஆகி விடுகிறது..............இதை கேட்கவா அன்று அவ்வளவு கெஞ்சி கூத்தாடி பர்மிசன் வாங்கினோம் என்று தோன்றுகிறது...

No comments:

Post a Comment